tamilnadu

பட்டியலின பெண்ணைத் தாக்கிய சிதம்பரம் கோவில் தீட்சிதர்களை உடனே கைது செய்திடுக!

தமிழக போலீஸ் டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடிதம்

சென்னை,பிப்.19- பட்டியலின பெண்ணைத் தாக்கிய சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக போலீஸ் டிஜிபிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு: சிதம்பரம் நடராஜர் கோவிலில் 13.02.2022 அன்று சாமி தரிசனம் செய்யச் சென்ற ஜெயஷீலா என்ற பட்டியலின பெண்ணை அங்கிருந்த தீட்சிதர்கள், அவரை சாதியின் பெய ரைச் சொல்லி திட்டியும், கேவலமாக பேசியும், கையால் தாக்கியும் கீழே தள்ளியுள்ளனர். இது தீண்டாமை வன்கொடு மையாகும்.  இதுகுறித்து ஜெயஷீலா சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்து, குற்ற எண் 245/2022, u/s 147, 341, 323, IPC. r/w 4 of TNPWH act & 3(1)(r), 3(1)(s) SC /ST Act ஆகிய பிரிவுகளின் கீழ் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்குப் பதிவு செய்து ஆறு நாட்களுக்கு மேலாகியும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. சட்டத்தின்முன் அனைவரும் சமமானவர்கள். ஆனால் மாவட்ட காவல்துறையினர் கண்டும் காணாமலும் இருப்பதும், கைது செய்யாமல் இருப்பதும் நீதிமன்றத்திற்கு சென்று அவர்கள் முன்ஜாமீன் பெறுவதற்கு உடந்தையாக செயல்படும் நட வடிக்கையாக உள்ளது. இது குற்றவாளிகள் அனைவரையும் தப்புவிக்கும் சட்டவிரோதமான  நடவடிக்கையாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  சிதம்பரம் நடராஜர் கோவிலில் தீட்சிதர்கள் பக்தர்களை தாக்குவது,

குறிப்பாக பெண்களை தாக்குவது உள்ளிட்ட சமூக விரோதச் செயல்களில்  கோவிலை மையமாக பயன்படுத்தி ஈடுபடுகின்றனர்.  மேலும் பட்டியலின மக்களை கோவிலுக்குள் நுழைய அனுமதிக்க மறுப்பது, அப்படியும் கோவிலுக்குள் நுழைபவர்களை தாக்குவது, கேவலமாக பேசுவது, கொலை மிரட்டல் விடுப்பது, தீண்டாமைக் கொடுமைகளை இழைப்பது போன்ற சட்டவிரோதமான நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடித்து வருகின்றனர். அப்படி இவர்கள் மீது வரும் புகார்களில் மாவட்ட காவல்துறையினர் சட்டப்பூர்வ மான நடவடிக்கைகள் எடுப்பதில்லை. இது குற்றவாளிக ளுக்கு மேலும் கூடுதலாக ஊக்கப்படுத்தும் செயலாக அமைந்து விடுகிறது. எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் பட்டியலின பெண்ணை தாக்கிய தீட்சிதர்கள் அனைவரையும் உடனடி யாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு தாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.  இந்த கடிதத்தின் நகல் கடலூர் மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர், சிதம்பரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.