திருப்பூர், மார்ச் 11 - திருப்பூர் அருகே சாமளாபுரம் பகுதியில் அருந்ததியர் மக்கள் குடியிருப்பை அகற்ற முயற்சி செய்வது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது என்று கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் குற்றம்சாட்டினார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா சாமளாபுரம் கிராமம் கா.சா. எண் - 445/1ஏ என்ற இடத்தில் நூறு ஆண்டு களுக்கும் மேலாக 160 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் பெரும்பாலானோர் அருந்ததியர் மக்களே ஆவர். இந்த நிலையில் இவர்களுக்கு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் வீட்டு வரி, குடிநீர் வரி, மின்சார இணைப்பு, ஆதார் அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. மேலும் 80 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்களுக்கு குடிநீருக்காக கிணறு வெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பெரும்பாலானோர் சாதாரண கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகின்றனர்.
இப்பகுதிக்கு அருகாமையில் சாமளா புரம் குளம் சீரமைக்கப்பட்டு உள்ளது. நூறு ஆண்டுகளில் ஒரு முறை கூட இந்த குளத்தில் வெள்ளம் ஏற்பட்டோ, மழை காரணமாகவோ குளம் நிறைந்து இந்த குடி யிருப்புக்குள் புகுந்து பாதிப்பு ஏற்பட்ட தில்லை. இச்சூழலில் இந்த இடமானது ஏரி புறம்போக்கு எனவும், 20 நாட்களுக்குள் வெளியேறுமாறும், மாவட்ட நிர்வாகம் பொதுப்பணித் துறை சார்பில் இங்குள்ள மக்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. இப்பகுதி மக்கள் இவ்விடத்திலிருந்து வெளியேற மறுத்து வருகின்றனர். பத்தாவது நாளாக காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை கோவை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் சாமளாபுரத்துக்கு நேரில் வருகை தந்து பாதிக்கப்பட்ட மக்களின் காத்திருப்புப் போராட்டத்தில் பங்கேற்று ஆதரவு தெரிவித்தார். அவர் பேசுகையில், கலைஞர் முதலமைச்சராக இருக்கும்போது பேரூராட்சி முழுவதும் பட்டியலின மக்கள் வாழுகின்ற இடங் களில் காங்கிரீட் சாலைகள் அமைக்கப் பட்டது. இப்பகுதியிலும் சாலை அமைத்து தரப்பட்டுள்ளது, பொதுப்பணித் துறையில் இருந்து கொடுக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,
இத்தனைஆண்டு காலம் பட்டா கொடுக்காதது அரசாங் கத்தின் தவறு. ஒன்னே கால் லட்சத்திற்கும் மேற்பட்டோர் பட்டா இல்லாமல் இருக்கின்ற னர். அத்தனை நபர்களும் அருந்ததியர் குடும்பத்தைச் சார்ந்தவர்கள். ஐஏஎஸ் அதி காரிகள் தான் அரசாங்கத்திடம் பட்டா இல்லா மல் பொது மக்கள் உள்ளனர் என்று தெரிவிக்க வேண்டும். பட்டா கொடுக்க வேண்டிய அதி காரிகள் இதற்கு மாறாக வேறு எங்கு இடத்திற்கு போகிறீர்கள் என்று கேட்பது நியாயமா? இது சரியல்ல, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேவை ஏற்பட்டால் போராட்டத்திற்கு தயாராகுங்கள் என தெரிவித்தார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் மாவட்ட செயலாளர் செ.முத்துக்கண்ணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் சிவஞானம், மார்க்சிஸ்ட் கட்சியின் பல்லடம் தாலுக்கா செயலாளர் ஆர்.பரமசிவம், பேரூராட்சி தலைவர் விநாயகா பழனிச்சாமி, ஆதிதமிழர் கட்சி ஜக்கையன், பௌத்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.ஆர்.ஓ.விடம் வலியுறுத்தல்
பின்னர், கோவை நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பல்லடம் அருகே சாமளாபுரத்தில் அருந்ததியர் மக்கள் குடும்பங்கள் வசித்து வரும் பகுதியை ஏரி புறம்போக்கு என்று சொல்லி குடியிருப்பை அகற்றக் கூடாது என திருப்பூர் மாவட்ட வரு வாய் அலுவலர் ராஜேந்திரனிடம் கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் நேரில் வலியுறுத்தி னார். எம்.பி.யின் மனுவை பெற்றுக் கொண்ட டி.ஆர்.ஓ., ராஜேந்திரன், இதில் நல்ல முடிவு எடுப்பதாகக் கூறினார்.