tamilnadu

img

ராகுல்காந்திக்கு பதில் எங்கே?

நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, மோடி அரசு மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பாஜக, ஆத்திரத்தில் மற்ற கட்சிகள் மீது பாய்வதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்:

‘நாடாளுமன்றத்தில் பா.ஜ.க அரசு மீது ‘இந்தியா’ கூட்  டணி கொண்டு வந்த நம்பிக்கை யில்லாத் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது ராகுல்காந்தி ஆணித்தரமான வாதங்களை முன்வைத்து பேசினார். மணிப்பூர் குறித்து, அங்கு நடக்கும் கலவரம் குறித்து, அங்கே  பற்றி எரியும் வன்முறை தீ குறித்து  பேசினார். ‘பாரத் மாதா கீ ஜே’  என்று கோஷம் போடும் பாஜகவின்  ஆட்சியில் மணிப்பூரில் பாரத மாதா என்ன நிலையில் இருக்கிறார்  என்பதை ராகுல் காந்தி கேள்வியாக  முன்வைத்தார். “மணிப்பூரில் பாரத மாதாவை கொன்றுவிட்டீர்கள்” என்று ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார். இப்படியெல்லாம் பதில் சொல்ல முடியாத கேள்விகளைக் கேட்பார் என்பதால்தான் அவரது எம்.பி. பதவியைப் பறிப்பதில் பாஜக படுவேகம் காட்டியது. ஆனால், உச்சநீதிமன்றம் சென்று  நீதியை நிலைநாட்டி, நாடாளு மன்றத்திற்குள் நுழைந்து கர்ஜித்தி ருக்கிறார் ராகுல். அவருடைய வாதங்களுக்கு பதில் சொல்ல முடியாத ஒன்றிய பாஜக அரசின் அமைச்சர் ஸ்மிருதி  இரானி, தன் பேச்சில் திமுக மீது அவ தூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.

மக்களவை உறுப்பினர் ஆ.ராசா சிறைக்கு அனுப்பப்படுவார் என்று,  ஒன்றிய அமைச்சரவையில் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பொறுப்பில் லாமல் பேசிய நிலையில், அதற்கு  ஆ.ராசா உடனடியாக பதிலடி  கொடுத்ததை பலர் தொலைக் காட்சியில் பார்த்திருப்பீர்கள். “நான் கைது செய்யப்  படப் போவதாக ஒன்றிய  அமைச்சர் ஸ்மிருதி  இரானி மிரட்டுகிறார். இதன் மூலமாக நீதித்  துறையை பா.ஜ.க.  அரசு தன் கட்டுப்பாட் டில் வைத்திருக்கிறது என்று கூற வருகிறாரா?” என்று  ஆ.ராசா நாடாளுமன்றத்தில் உரத்த குரலில் கேட்டதற்கு, ஆளும் தரப்பில் உரிய பதில் தரப்பட வில்லை. பா.ஜ.க. அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்கள், பா.ஜ.க.வின் மிரட்டலுக்கு அடிபணியாத கட்சி கள் - இவற்றைக் குறிவைப்ப தற்காகத்தானே அமலாக்கத் துறை, சி.பி.ஐ., வருமான வரித்  துறை உள்ளிட்டவற்றை பா.ஜ.க. அரசு தன் கைப்பாவையாக பயன்படுத்தி வருகிறது. நாடாளு மன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பி னரைப் பார்த்து, “எங்களை எதிர்த்  தால் உங்கள் வீட்டுக்கு  அமலாக்கத் துறை  வரும்” என்ற வகையில்  பேசிய அமைச்சரை ஒரு சில நாட்களுக்கு முன் நாடு பார்த்தது. தி.மு.க இத்தகைய மிரட்டல் களுக்கும் பூச்சாண்டிகளுக்கும் பயந்து ஒதுங்குகிற இயக்கம்அல்ல. மக்க ளவையில்கழகத்தின் பொருளாளர் டி.ஆர்.பாலு,  மாநிலங்களவையில் திருச்சி  சிவா, ஒன்றிய பா.ஜ.க அரசின்  மக்கள் விரோதச் செயல்களை அம்பலப்படுத்திப் பேசியிருக்கி றார்கள். கனிமொழி சிலப்பதி காரத்தை மேற்கோள்காட்டி, பா.ஜ.க.வின் செங்கோல்லட்ச ணத்தை அம்பலப்படுத்தியிருக்கி றார். தயாநிதி மாறன் தில்லி  சட்டமசோதா பற்றி பேசியிருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தி.மு.க.வினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு  நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்  களின் கட்சி நிகழ்வுகளிலும் எதி ரொலிக்கிறது.’