மோடி அரசுக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கேள்வி
மதுரை விமான நிலைய ஆலோசனைக்குழு கூட்டம் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி., இணைத்தலைவர் சு. வெங்கடேசன் எம்.பி., தலைமையில் அக்டோபர் 10 செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் சு.வெங்கடேசன் எம்.பி., கூறியதாவது:
ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்த முடிவு
2023 ஏப்ரல் முதல் மதுரை விமான நிலையம் 24 மணிநேரமும் செயல்படும் என்று விமானப் போக்குவரத்துத்துறை அறிவித்த அறிவிப்பு இப்பொழுது வரை நடை முறைப்படுத்தப்படாமல் உள்ளது. மதுரை விமான நிலைய வளர்ச்சி யில் ஒன்றிய அரசின் அக்கறை யின்மை தொடர்ந்து நீடிக்கிறது. விமான நிலையத்தை 24 மணிநேர மும் இயக்க வேண்டும் என்ற அறி விப்பையே கூட, பல அழுத்தங்க ளுக்கு பிறகுதான் ஒப்புக்கொண்டு வெளியிட்டனர். ஆனால், இன்று வரை அதை நடைமுறைப்படுத்த மறுக்கின்றனர். இதுகுறித்து இன் றைய கூட்டத்தில் மிகக் கவலை யோடு விவாதிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாடாளு மன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் தென் மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து நாடாளு மன்ற உறுப்பினர்கள் மற்றும் மதுரை விமான நிலைய ஆலோ சனைக்குழு உறுப்பினர்களை இணைத்து ஒன்றிய அமைச்சரை சந்தித்து இதுகுறித்து வலியுறுத்து வது என்ற முடிவினை எடுத்து இருக் கிறோம்.
நாட்டிலேயே முதலிடத்தில் மதுரை விமான நிலையம்
மதுரை மற்றும் தென்மாவட்ட தொழில் வணிக வளர்ச்சிக்கு மதுரை விமான நிலையத்தின் விரி வாக்கம், சர்வதேச விமான நிலைய மாக அறிவிப்பது மிக முக்கியமான நடவடிக்கை. மதுரை விமான நிலை யத்தை பயன்படுத்தும் உள்நாட்டு பயணிகளின் எண்ணிக்கையும் சர்வதேச பயணிகளின் எண்ணிக் கையும் மிக அதிகம். “டொமஸ்ட் டிக்” விமான நிலையங்களில் மதுரை விமான நிலையமே நாட்டில் முதலிடத்தில் இருக்கிறது. ஆனாலும் மதுரை விமான நிலை யத்திற்கு நியாயமான உரிமை களை தருவதில் தொடர்ந்து தயக் கம், மறுப்பு ஒன்றிய அரசுக்கு உள் ளது.
முழுக்க அரசியல் வஞ்சகம்
பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியிலுள்ள விமான நிலை யம் சர்வதேச விமான நிலையமாக இருக்கிறது. அதனை விட மதுரை விமான நிலையத்தில் பயணம் செய் கிற பயணிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம். எனவே, இது முழுக்க ஒரு அரசியல் காரணத்துக் காக செய்யப்படும் ஒரு வஞ்சகம். அதனால்தான் தொடர்ந்து இவ்வளவு பெரிய போராட்டத்தை நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மதுரை விமான நிலையம் ஏப் ரல் மாதத்திலிருந்து 24 மணி நேர மும் இயங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்ட ஆணையை நடை முறைப்படுத்துவதில் என்ன பிரச் சனை இருக்கிறது? கேட்டால், பாது காப்பு வீரர்கள் குறைவாக இருக்கி றார்கள் என்ற காரணத்தை சொல்கி றார்கள். போதிய பாதுகாப்பு படை வீரர்கள் இல்லாமல் எப்படி இந்திய விமானத்துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டது. எனவே, சொத்தை யான காரணங்கள்தான் இதற்கு அடிப்படை. எந்த ஒரு வளர்ச்சி திட் டத்தையும் உண்மையான ஒரு அக்கறையோடு செய்ய ஒன்றிய அரசு தயாராக இல்லை.
வாரணாசியில் செலவிடும் பணம் மட்டும் வீணில்லையா?
அதேபோல், விமான நிலையம் அருகே செல்லும் தேசிய நெடுஞ் சாலையை சுரங்கப் பாதை வழியே இயக்குவது என்ற ஒரு ஆலோ சனை விமான துறையால் ஆய்வு செய்யப்பட்டது. வாரணாசியில் இதனை சாத்தியப்படுத்தியும் இருக்கிறார்கள். ஆனால் மதுரை விமான நிலையம் என்று வரும்பொ ழுது சுரங்கப்பாதை அமைக்க 600 கோடி ரூபாய் செலவு ஏற்படும், அதைவிட சுற்றுச்சாலைக்கு போனால் 100 கோடி ரூபாய்க்கு குறையும் என்று சொன்னார்கள். இந்த பொருளாதாரக் கணக்கு ஏன் வாரணாசிக்கு பொருந்தவில்லை. அதே திட்டம் மதுரைக்கு என்று வருகிற பொழுது 600 கோடி ரூபாய் செலவு வீண் என்று காரணம் சொல் கிறார்கள். எனவே, மதுரை சர்வதேச விமான நிலையத்தை சாத்திய மாக்குவதற்கு பல தடைகளைத் தாண்ட வேண்டி இருக்கிறது தாண்டுவோம்... நாம் வெற்றி பெறுவோம்”. இவ்வாறு சு.வெங்கடேசன் எம்.பி., கூறினார்.