எந்தப் படிப்பில் சேர்ந்தாலும், அது நமது வருங்கால வேலையைத் தீர்மானிக்கப் போவதாக இருக்கும். தனியார் நிறு வனங்கள் வளாகத தேர்வு நடத்துகையில், எந்தத் தாளிலும் தேர்ச்சி பெறாமல் உங்கள் கல்லூரி வாழ்க்கை கழிந்ததா என்பதைப் பார்ப்பார்கள். உங்கள் மதிப்பெண் விழுக்கா டும் முதன்மையானதாக இருக்கும். அரசுப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளிலும் கல்லூரியில் உங்கள் முன்னேற்றம் எப்படி இருந்திருக்கிறது என்று பார்ப்பார்கள். கல்லூரிக் காலம் வெறும் பட்டாம்பூச்சி போன்று பறந்து திரிந்துவிட்டு செல்லும் காலம் என்று எடுத்துக் கொள்ளா மல், சரியான நேரத்தில் சரியாகப் பாய்ந்து வாய்ப்புகளைக் கொத்திச் செல்லும் கழுகு களைப் போலவும் இருத்தல் அவசியம். வங்கி, காப்பீட்டுத் துறைகளில் வெறும் பட்டப்படிப்பு என்பதைத் தாண்டி, குறைந்த பட்சம் இவ்வளவு விழுக்காடு மதிப்பெண்கள் தேவை என்று கேட்கத் தொடங்கி விட்டார்கள். பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் தேர்வுக்கு விண்ணப்பிக்க பட்டப்படிப்பில் குறைந்தது 60 விழுக்காடு மதிப்பெண்கள் தேவைப்படுகிறது. பெரும்பாலான அரசுத் தேர்வுகள் மற்றும் பெரும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கான தேர்வுகள், நேர்முகத் தேர்வுகள் மற்றும் ஆவ ணங்கள் சரிபார்ப்பு ஆகியவற்றிற்குச் செல்கை யில், பட்டப்படிப்பு சான்றிதழ் அல்லது ஒட்டு மொத்த மதிப்பெண் பட்டியல் என்று நின்று விடுவதில்லை. ஒவ்வொரு பருவத்திற்குமான தனித்தனி மதிப்பெண் பட்டியலை சோதிக்கி றார்கள். இதனால் ஒவ்வொரு பருவத் தேர்வி லும் கவனம் செலுத்திப் படிக்க வேண்டி யிருக்கிறது.