tamilnadu

அவர்கள் ஆணியடிப்பார்கள்! - மு.அழகர்சாமி, கடமலை

நீங்கள்
முள்வேலி அமைத்து
அவர்களைத்தடுத்து விட்டு
உணவுக்கு என்ன
கல்லையும் மண்ணையும்
சமைத்தா சாப்பிடுவீர்கள்??

அவர்கள் என்ன
தேசத்துரோகிகளா?
அவர்களைத்தடுக்க
சோனிக் கருவிகளும்
துணை ராணுவமும்.....

கார்ப்பரேட் முதலாளிகளுக்கு
கம்பளம் விரித்து
வரவேற்கும்
சங்கிப் புத்திக்கு..
சாமானிய விவசாயிகளின்
வேதனை எப்படி புரியும்..?

நாட்டின் பொருளாதாரத்தின்
முதுகெலும்பு
விவசாயிகளின் கையில் என
சொல்லிவிட்டு சென்றாரே
மகாத்மா!
அதுகூட நினைவுக்கு 
வரவில்லையோ???

அது சரி அவரையே
சுட்டுகொன்ற கோட்சேவின்
வழிவந்தவர்கள்தானே
நீங்கள்!
உங்களது தேவை...
அயோத்தி..ராம்.ராம்..தானே!

விவசாயிகளை தடுக்க
இத்துணை
யுக்திகளை கையாள்வதை விட
அழைத்துப்பேசினால்
விவசாயம் காக்கப்படுமே!

டிரோன் மூலம் கண்ணீர்ப்புகை
கான்கிரீட் சுவர்.
முள்வேலி.. ஆணி நடுகை...
தடுப்புக்காவலர்கள்

இவையெல்லாம்
விவசாயிகளை தடுக்க அல்ல
விவசாயத்தை அழிக்க.......

இப்போது நீங்கள்
சாலையில் ஆணியடித்தீர்கள்... 
நாளை விவசாயிகள் 
உங்கள் ஆட்சிக்கு 
இறுதி ஆணியடிப்பார்கள்!