tamilnadu

ஊழியர்களுக்கு வாரசம்பளம்: இந்தியா மார்ட் அதிரடி திட்டம்

பிரபல வணிக நிறுவனமான இந்தியா மார்ட் (INDIA MART) ஊழியர்களுக்கான சம்பள முறையை அதிரடியாக மாற்றியுள்ளது. அதாவது மாத சம்பள முறைக்கு மாற்றாக வாராந்திர சம்பளம் முறைக்கு மாறியுள்ளது. ஊழியர்கள் நிதிநிலைமை ஆரோக்கியமாக இருப்பதற்காக இந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளதாக இந்தியா மார்ட் நிறுவனத்தின் தலைவர் தினேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.  இதே போல இணைய வணிகங்களில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய யூனிகார்ன் நிறுவனமான மீஷோ-வும்(MEESHO) வாரச்சம்பள முறையை கொண்டு வருவதாக அறிவித்துள்ளது.  வாரச் சம்பள முறையை அறிவித்துள்ள இந்த 2 நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதாவது பணியிடங்களுக்கு சென்று வேலை செய்ய தேவையில்லை. எங்கிருந்து வேண்டுமானாலும் வேலை செய்யலாம் என ஸ்மார்ட் திட்டங்களும் உள்ளன.