tamilnadu

img

விழுப்புரத்தில் குவிந்த திருநங்கைகள் களைகட்டும் கூவாகம் திருவிழா

விழுப்புரம், ஏப்.17- 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கூவாகம் கூத்தாண் டவர் கோவில் சித்திரை திரு விழாவில் பங்கேற்ற ஆயி ரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரத்தில்  குவிந்துள்ளனர்.    மூன்றாம் பாலினமாக கருத ப்படும் திருநங்கைகள் குல தெய்வமாக வணங்கும் கூத்தாண்ட வர் கோவில் விழுப்புரம் அருகே கூவாகம் என்ற கிராமத்தில் உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்த கூவாகம்  மாவட்டம் பிரிவினை யின்போது  கள்ளக்குறிச்சி மாவட்டத் தோடு சேர்க்கப்பட்டது. கூத்தாண்ட வர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் 18 நாட்கள் திரு விழா வெகு விமர்சையாக நடை பெறும். இந்த திருவிழாவில் திரு நங்கைகள் லட்சக்கணக்கில் கலந்துகொள்வார்கள். கொரோனா ஊரடங்கு காரணமாக அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்ட வர் கோவிலில் சித்திரை திரு விழா நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட் டதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு கூவாகம் திரு விழா நடைபெறுகிறது. இந்த திருவிழாவை காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் இருந்தும் மற்றும் இந்தி யாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான திரு நங்கைகள் விழுப்புரத்தில் குவிந்துள் ளனர்.