மதுரை:
தீக்கதிர் நாளிதழின் ஆசிரியரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயற்குழு உறுப்பினருமான மதுக்கூர் ராமலிங்கம் - மீனாம்பிகை ஆகியோரின் புதல்வன் மருத்துவர் இரா.பாரதிவசந்த் - மருத்துவர் க.விவேகாதர்சினி ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்வு சனிக்கிழமை மதுரையில் நடைபெற்றது.
வரவேற்பு நிகழ்விற்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்க மாநில கௌரவத் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார். கவிஞர் நா.முத்துநிலவன் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன், ஏ.லாசர், கலைமாமணி கு. ஞானசம்பந்தன், திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, தென்மண்டல ஐ,ஜி. எஸ்.முருகன், தீக்கதிர் ஆசிரியர் குழு ஆலோசகர் வி.பரமேசுவரன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஏ.பெருமாள், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் என். நன்மாறன், கே.பாலபாரதி, தமுஎகச மாநிலத் துணைத்தலைவர் நந்தலாலா மற்றும்கட்சியின் மாவட்டச் செயலாளர் கள், தீக்கதிர் ஊழியர்கள் உள் ளிட்ட பலர் மணமக்களை வாழ்த் தினர். தீக்கதிர் செய்தியாசிரியர் ப.முருகன் நன்றி கூறினார்.