சென்னை, மே 16- எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துவோம் என்று சீத்தாராம் யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சென்னையில் செவ்வாயன்று (மே 16) தமிழ்நாடு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துப் பேசினார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்பி, செய்திதொடர்பாளர் டி.கே.எஸ். இளங் கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர் சீத்தா ராம் யெச்சூரி செய்தியாளர்களிடம் கூறியதாவது, விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்துள்ள மாநாட்டில் பங்கேற்பதற்காகச் செல்கிறேன். இதற்காக சென்னை வந்த நான் மரியாதை நிமித்தமாக முத லமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசி னேன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திமுக அரசை ஆதரிப்பதோடு மட்டு மல்லாமல் தோழமை கட்சியாக உள் ளது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். கர்நாடக சட்டப்பேரவை தேர்த லில் பாஜக தோற்கடிக்கப்பட்ட பின்னர் எழுந்துள்ள அரசியல் நிலைமைகள் குறித்து விவாதித்தோம். பாஜகவுக்கு எதிராக மதச்சார்பற்ற எதிர்க்கட்சி களின் ஒற்றுமையை எவ்வாறு பலப் படுத்துவது என்பது குறித்தும் நாங்கள் விவாதித்தோம். இந்தாண்டு இறுதிக்குள் சில மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தல் மற்றும் அடுத்தாண்டு நடை பெறவுள்ள மக்களவைத்தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்து அடுத்த டுத்த நாட்களில் இக்கட்சிகளிடையே தீவிரமான ஆலோசனை நடைபெற வுள்ளது.
பாஜகவுக்கு எதிராகத் தேசிய அளவில் அணிச்சேர்க்கை நிச்சயம் உருவாகும். அதற்கான பேச்சு வார்த்தைகள் ஏற்கனவே பல்வேறு அர சியல் கட்சிகளிடையே தொடங்கி விட்டது. தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று விரும்பும் மதச்சார்பற்ற அர சியல் கட்சிகளிடையே ஒருவருக் கொருவர் ஒத்துழைத்துச் செயல்படு வது குறித்தும் பேச்சுக்கள் தொடங்கி யுள்ளது. பாஜகவை வீழ்த்துவது மட்டு மல்ல இன்று மிக முக்கியமானது இந்தியாவைப் பாதுகாப்பதும் ஆகும். இந்திய அரசமைப்புச் சட்டம். ஜனநா யகம், மக்களின் சிவில் உரிமைகள் ஆகியவற்றை பாதுகாத்து இப்போது இருப்பதை விடச் சிறந்ததொரு இந்தியாவை உருவாக்குவது மிகவும் அவசியமாகும். அதற்கு மதவாத சக்திகள் வீழ்த்தப்படவேண்டும். மாநிலத்திற்கு மாநிலம் குறிப்பிட்ட சில பிரச்சனைகள் இருந்தாலும் நிலைமைகளுக்குத் தகுந்தவாறு முடிவுகளை எடுப்போம். .
உதார ணத்திற்கு தமிழ்நாட்டில் அனைத்து மதச் சார்பற்ற எதிர்க்கட்சிகளும் ஓரணியின் கீழ் வந்துள்ளன. கர்நாடகா வில் காங்கிரஸ் தனித்து நின்றபோதி லும் பாஜகவை வீழ்த்துவதில் வெற்றிபெற்றுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணியும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் தனித்தனி யாகத் தேர்தலைச் சந்தித்த போதிலும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் பார்த்துக்கொண்டன. எனவே ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்றவாறு பாஜகவை வீழ்த்து வதற்கான யுக்திகள் வகுக்கப்படும். அரசமைப்புச் சட்டம், ஜனநா யகம், மதச்சார்பின்மை, மக்களின் உரிமை கள் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றவிடாமல் தடுப்பது முக்கியம். அதற்கு ஏற்றவாறு எங்களது செயல்பாடுகள் இருக்கும். இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார்.