ஜம்மு - காஷ்மீரில் முழு மாநில அந்தஸ்தையும் ஜனநாயகத்தையும் மீட்டெடுப்போம்!
ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட - அரசியலமைப்புக்கு புறம்பான மற்றும் பேரழிவு விளைவித்த முடிவு கள் - 370 மற்றும் 35ஏ சரத்துக்களை ரத்து செய்தது - மற்றும் தன்னிச்சையான பல சட்டங்கள் மற்றும் தரம் குறைக்கும் நடவடிக்கைகள் ஆகி யவை வரலாற்றுச் சிறப்புமிக்க ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை துண்டாடி தரம் குறைத்துள்ளன. மாநில அந்தஸ்தை பறித்து, மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக உடைத்தது, ஆழமான அரசியல் வெற்றிடத்தை உருவாக்கி, அதன் மக்க ளிடையே நிச்சயமற்ற தன்மை மற்றும் அந்நிய மாதல் உணர்வை தீவிரப்படுத்தியுள்ளது. உரிமைகள் மறுப்பு ஜம்மு - காஷ்மீரில் குடிமை சுதந்திரங்கள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக சுதந்தி ரங்கள் தொடர்ந்து அரிக்கப்படுகின்றன. யுஏபிஏ மற்றும் பிஎஸ்ஏ போன்ற கடுமையான சட்டங்க ளின் கீழ் தன்னிச்சையான கைதுகள் ஒரு கவ லைக்குரிய வழக்கமாக மாறிவிட்டன. நூற்றுக் கணக்கான அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் ஜம்மு - காஷ்மீருக்கு உள்ளேயும் வெளியேயும் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர். இளைஞர்களுக்கு பாதுகாப்பு சரிபார்ப்பு என்ற பெயரில் வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன; அதே சமயம் சாதாரண காரணங்களுக்காக பாஸ்போர்ட்டுகள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. மாநில பாதுகாப்புகள் பறிப்பு ஜம்மு - காஷ்மீர், மகாராஜா ஹரி சிங் ஆட்சி காலத்திலிருந்தே நிலம் மற்றும் வேலைகளுக் கான சிறப்பு பாதுகாப்பு உரிமைகளை அனுப வித்து வந்தது, அப்போது இந்த பிராந்தியத்தில் வசிப்பவர் அல்லாதவர்கள் நிலத்தை வாங்கவோ வேலை பெறவோ அனுமதிக்கப்படவில்லை. மற்ற சில மாநிலங்களிலும் மக்களுக்கு இத்தகைய உரிமைகளை வழங்கும் பல்வேறு விதிகள் உள் ளன. ஆனால் ஜம்மு - காஷ்மீரின் நிரந்தர குடி யிருப்பாளர்களுக்கான நிலம் மற்றும் வேலை வாய்ப்புக்கான இந்த பாதுகாப்புகள் தன்னிச்சை யாக பறிக்கப்பட்டன, இது மக்களிடையே பாது காப்பின்மையை அதிகரித்துள்ளது. பொருளாதார சிதைவு மாநிலத்தின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. வளர்ச்சி, முதலீடு மற்றும் வேலை உருவாக்கம் குறித்த பெரிய வாக்குறு திகள் வெற்றுப் பேச்சு என்பது நிரூபிக்கப் பட்டுள்ளன. தினக்கூலி தொழிலாளர்கள் ஒழுங்க ற்ற ஊதியங்களையே பெறுகிற நிலையை எதிர்கொள்கின்றனர். மேலும் விவசாயம், தோட்டக் கலை, கைவினைப் பொருட்கள் மற்றும் போக்கு வரத்து போன்ற முக்கிய துறைகள் ஆழ்ந்த நெருக்கடியில் உள்ளன. குறிப்பாக ஆப்பிள் விவசாயிகள் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர். குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) போன்ற சட்டப்பூர்வ உத்தர வாதங்கள் இன்னும் இல்லை. அடக்குமுறை நடவடிக்கைகள் ஆகஸ்ட் 2019 முதல், உள்ளூர் சட்டங்களில் மாற்றங்கள், ஊடகங்கள் மீதான கட்டுப்பாடு கள், மற்றும் அரசு ஊழியர்களை அச்சுறுத்துதல் போன்ற நிர்வாக உத்தரவுகள் சாதாரணமாகி விட்டன. இந்த அடக்குமுறை நடவடிக்கைகள் இருந்தபோதிலும், ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் கணிசமான வாக்குப்பதிவு காணப்பட்டது, மக்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். மாநி லத்தை மதவாத மற்றும் பிராந்திய ரீதியாகத் துண்டாடி அணிதிரட்டுவதற்கும், பணபலம் மற்றும் தரகர்களைப் பயன்படுத்தி தேர்தல் முடிவை கையா ளுவதற்கும் பாஜக செய்த முயற்சிகள் தோல்வி யடைந்தன. ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு - காஷ்மீர் மீதான அரசியலமைப்புக்கு எதிரான தாக்குதலையும், அதைத் தொடர்ந்த கொடூரமான அடக்குமுறையையும் மக்கள் தெளிவாக நிராக ரித்து, பாஜக தலைமையிலான அரசின் கொள்கை களுக்கு எதிராக தீர்ப்பளித்துள்ளனர். தொடரும் குறுக்கீடுகள் இருப்பினும், இந்த ஜனநாயக தீர்ப்பை மதிப்பதற்குப் பதிலாக, பாஜக தலைமையிலான ஒன்றிய அரசு தொடர்ந்து அதற்கு குழிதோண்டு கிறது. நாடாளுமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்தி லும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது தொடர்பாக இந்திய அரசு அளித்த உறுதிமொழிகள் இருந்த போதிலும், பாஜகவும் அதன் நியமிக்கப்பட்ட துணைநிலை ஆளுநரும் உமர் அப்துல்லா அரசின் செயல்பாட்டை தடுக்கின்றனர். சமீபத்தில் ஜம்மு - காஷ்மீர் மாநிலப்பிரிவு அதிகாரிகளின் பெரும் எண்ணிக்கையிலான இடமாற்றங்கள் மேலும் கவலையை தூண்டி, தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தின் அதிகாரத்தை குறைத்துள்ளன. கோரிக்கைகள் எனவே 24ஆவது கட்சி மாநாடு பின்வரும் கோ ரிக்கைகளை வைக்கிறது: H ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை மீட்டெ டுப்பதற்கான ஒரு படியாக உடனடியாக முழு மாநில அந்தஸ்தை வழங்க வேண்டும். H நிலம் மற்றும் வேலை உரிமைகளுக்கான பாதுகாப்பு. H ஜனநாயக, குடிமை மற்றும் தொழிற்சங்க உரிமைகளை மீட்டெடுத்தல். Hஅரசியல் கைதிகள் மற்றும் பத்திரிகையா ளர்களை விடுதலை செய்தல் மற்றும் பத்திரிகை சுதந்திரத்தை உறுதி செய்தல். H அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளின் பேரில் இளைஞர்களை கைது செய்வதை நிறுத்துதல். ஜம்மு - காஷ்மீர் மக்களின் நியாயமான மற்றும் அரசியலமைப்பு உரிமைகளை பாதுகாப் பதற்காக நிற்குமாறு அனைத்து மதச்சார்பற்ற மற்றும் ஜனநாயக சக்திகளிடம் கட்சி வேண்டு கோள் விடுக்கிறது
விவசாய சந்தைப்படுத்தல் குறித்த வரைவு தேசிய கொள்கை கட்டமைப்பை திரும்பப் பெறுக!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சகத்தால் சுற்றுக்கு விடப்பட்ட “விவசாய சந்தைப்படுத்தல் குறித்த தேசிய கொள்கை கட்டமைப்பு (என்பிஎஃப்ஏஎம்)” வரைவு குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. இந்த வரைவு, விவசாயிகளின் நலன்களை தியாகம் செய்து, பெருநிறுவன லாபத்தை அதிகரிக்க ஆர்எஸ்எஸ்- பாஜக தலைமையிலான ஒன்றிய அரசின் சதியை வெளிப்படுத்துகிறது. இது மக்களால் வெறுக்கப்பட்ட மற்றும்; அவர்களது எழுச்சியால் ரத்து செய்யப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை பின்கதவு வழியாக அமலாக்கும் ஒரு சூழ்ச்சியாகும். விவசாயிகள் கோரிக்கைகள் புறக்கணிப்பு லாபகரமான குறைந்தபட்ச ஆதரவு விலை யை சட்டப்பூர்வமாக்குதல், கடன் தள்ளுபடி, விரி வான பயிர் காப்பீடு, வேளாண்மையில் பொது முத லீட்டை அதிகரித்தல், விவசாயிகளுக்கு ஆதர வான கடன் வசதிகள் போன்ற - போராடும் விவ சாயிகள் இயக்கத்தால் எழுப்பப்பட்ட எந்தவொரு தீவிர கோரிக்கைகளையும் நிவர்த்தி செய்வதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு இந்த பிற்போக்கான வரை வைக் கொண்டு வந்துள்ளது. விவசாய சந்தைப் படுத்தல் என்பது, அரசியலமைப்பின் சரத்து 246ன் கீழ் மாநிலப் பட்டியலில் உள்ளது என்ற உண் மையை வரைவு வெறும் வாய்ச்சொல்லளவில் ஒப்புக் கொள்கிறது; அதே வேளையில், வரைவின் உண்மையான நோக்கம் கூட்டாட்சி மற்றும் மாநில அரசுகளின் அதிகாரத்தை தாக்குவது, மாநில ஆதரவுடனான சந்தை உள்கட்டமைப்பை ஒழிப்பது மற்றும் ஏபிஎம்சிகளின் பங்கை அரிப் பது ஆகும். இதனால் சிறு மற்றும் நடுத்தர விவசா யிகள் தனியார் வர்த்தக கூட்டமைப்புகளின் சுரண் டலுக்கு மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றனர். முன்மொழியப்பட்ட ‘சீர்திருத்தங்கள்’ வரைவில் முன்மொழியப்பட்ட முக்கிய சீர்திருத்தங்களில் தனியார் மொத்த சந்தைகளை நிறுவுதல், பெருநிறுவன பதப்படுத்துநர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களால் நேரடி பண்ணை வாயில் கொள்முதல், பாரம்பரிய சந்தை முற்றங்க ளை பெருநிறுவன கட்டுப்பாட்டிலான கிடங்குகள் மற்றும் சைலோக்களால் அழித்தல் மற்றும் ஒருங்கிணைந்த மாநில அளவிலான சந்தை கட்ட ணம் மற்றும் வர்த்தக உரிமம் முறையை அறி முகப்படுத்துதல் ஆகியவை அடங்கும். பெரிய பெருநிறுவனங்கள், ஏபிஎம்சி சந்தை முற்றங்க ளை தவிர்த்து, விவசாயிகளிடமிருந்து நேரடியாக விளைபொருட்களை வாங்கலாம் என்று வரைவு முன்மொழிகிறது. ரிலையன்ஸ் மற்றும் அதானி உள்ளிட்ட பெரிய வணிக நிறுவனங்கள் ஏற் கனவே ஹரியானாவின் சிர்சா மற்றும் பஞ்சா பின் லூதியானாவில் விரிவான கிடங்கு உள் கட்டமைப்பு மற்றும் தனியார் ரயில்வே வலைப் பின்னல்களை கட்டமைத்துள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு ஆபத்து பெருநிறுவனங்கள், லாபநோக்குடன் நடத்தும் லஞ்ச ஊழல் பேரங்கள் மற்றும் சர்வ தேச நிதி மூலதனம் (ஐஎஃப்சி), குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு கடுமையாக எதிர்ப்பு தெரி விக்கின்றன, ஏனெனில் அவர்களின் உத்தி எப்போதும் விவசாய விளைபொருட்களை மிக குறைந்த விலையில் கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி, பிராண்டிங் செய்து விற்பனை செய்து, அதிக பட்ச லாபம் ஈட்டுவதாகும். இந்த வழியில், பெரு வணிகம் விவசாயிகளையும் நுகர்வோரையும் சுரண்டுகிறது. சந்தைத் திறன் என்ற பெயரில், ஒன்றிய அரசு விவசாயத்தின் பெருநிறுவன கொள் ளைக்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது. இவ்வாறு, இது விவசாயிகளின் தற்கொலை களையும் கடன் சுமையையும் நிலைநிறுத்தி, விவசாயிகளை வறுமைக்கு தள்ளுகிறது. வேளாண்மையின் கார்ப்பரேட்மயமாக்கம் வேளாண்மையின் கார்ப்பரேட்மயமாக்கல் தேவை குறித்து வரைவு மிகத் தெளிவாக உள்ளது; இது விவசாயத்தை “சீர்திருத்த” ஒரே வழியாக கரு தப்படுகிறது. உதாரணத்திற்கு, மோடியின் பிரி யமான திட்டமான மிகவும் பிரபலப்படுத்தப்பட்ட எஃப்பிஓ திட்டத்தை, பெரு நிறுவன ஊடுருவலை மேலும் ஊக்குவிப்பதற்கான கருவியாக இந்த வரைவு காண்கிறது. இது வேளாண்மையில் இயங்கும் பெரிய வணிக நிறுவனங்களுடன் தொகுப்பு அடிப்படையிலான எஃப்பிஓக்கள், ஒப்பந்த விவசாய ஏற்பாடுகளில் நுழைவதற்கு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் இது செய்யப்படுகிறது. எஃப்பிஓ திட்டத்தை ஊக்குவிப்ப தில் சிஐஐ மற்றும் ஃபிக்கி போன்ற பெருநிறுவன குழுக்கள் காட்டும் பெரும் ஆர்வத்தின் பின்னுள்ள வர்க்க நலன் மிகத் தெளிவாக உள்ளது. நிதிமயமாக்கல் மற்றும் உணவுப் பாதுகாப்பு வருங்கால மற்றும் விருப்ப சந்தைகள் மூலம் நிதிமயமாக்கலை ஆழப்படுத்துவதற்கான பரிந்துரைகளிலும் பெரிய வணிக நிறுவனங்க ளின் குறுக்கிடுதல் தெளிவாக தெரிகிறது. இது பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதி மூலதனத்தை உள்நாட்டு உணவுத் தொழிலில் ஆதிக்கம் செலுத்த அனுமதிக்கும், இது இந்திய மக்களின் உணவுப் பாதுகாப்பையும் ஆபத்தில் ஆழ்த்தும். எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கண்ட வரைவுக்கு கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கே எம்) சமீபத்திய நாடு தழுவிய போராட்டங்களில் இந்த வரைவை எரித்து ஆயிரக்கணக்கான விவ சாயிகளை திரட்டியது. ஹரியானா மற்றும் பஞ்சா பில் நடந்த இரண்டு பெரிய கிசான் மகாபஞ்சா யத்துகள் சேர்ந்து 75,000க்கும் அதிகமான விவசாயிகளை அணிதிரட்டின. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் 24வது மாநாடு, பெருநிறுவனங்களுக்கு ஆதர வான மற்றும் விவசாயிகளுக்கு எதிரான என்பி எஃப்ஏஎம் திரும்பப் பெறப்படும் வரை போராட் டத்தை மேலும் தீவிரப்படுத்துமாறு தனது அனைத்து அமைப்புகளையும் அழைக்கிறது.