மதுரை, டிச. 15- இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பு சார்பில் தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கூறியபடி சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். தேசியக் கல்விக் கொள்கை 2020-ஐ ரத்து செய்ய வேண்டும்.தொடக்கக்கல்வித் துறையைச் சீரழிக்கும் அரசாணை 243ஐ ரத்து செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில அளவிலான மாபெ ரும் கோரிக்கை மாநாடு மதுரை நாக மலைபுதுக்கோட்டையில் டிசம்பர் 15 ஞாயிறன்று நடைபெற்றது. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரி யர் கூட்டணியின் மாநில பொதுச்செய லாளர் ச.மயில், தமிழ்நாடு உயர் நிலை மேல்நிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாய வன் , தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர் பொ.அன்பழகன் ஆகி யோர் கூட்டுத் தலைமை வகித்தனர். மாநாட்டிற்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழ கத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச் சந்திரன், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு அகில இந்திய செயற் குழு உறுப்பினர் மூ.மணிமேகலை, தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்ட தாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் த.உதயசூரியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்ட மைப்பின் துணைப் பொதுச்செயலாளர் சிவஸ்ரீரமேஷ் வரவேற்றார். மாநாட்டை திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம் தொடங்கி வைத்து உரையாற்றினார். தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் அ.சங்கர் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார். தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனியன் தலைவர் ஆர்.இளங்கோவன் , பொதுப்பள்ளிக்கான மாநில மேடையின் பொதுச்செயலானர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகி யோர் கருத்துரையாற்றினர். தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஜனார்த்தனன் நன்றி கூறினர். மாநாட்டுப் பிரகடனம் 10 அம்சக் கோரிக்கைகளை வலியு றுத்தி இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்ட மைப்பின் சார்பில் தொடர் போராட்டங் களை நடத்த மாநாட்டில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது. 2025 ஜனவரி முதல் வாரத்தில் அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்து முறையிடுவது எனவும், 25.01.2025 அன்று மாநிலம் முழு வதும் மாவட்டத் தலைநகரங்களில் தர்ணா போராட்டம் நடத்துவது எனவும், 22.02.2025 அன்று சென்னையில் பத்தா யிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான உண்ணாவிரதப் போராட் டத்தை நடத்துவது எனவும், மேற்கண்ட போராட்ட நடவடிக்கைகளுக்கு பின்பும் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை எனில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது ஆர்.இளங்கோவன் தட்சிண ரயில்வே பென்சனர்ஸ் யூனி யன் தலைவர் ஆர்.இளங்கோவன் பேசு கையில்,பழைய பென்சன் திட்டம் தான் நம்முடைய கோரிக்கை.அதற்கு குறைவாக எதையும் ஏற்க முடி யாது.இதற்கான போராட்டத்தை நடத்த வேண்டும்.ஏராளமான ஒப்பந்தத் தொழிலாளர்களை கொண்டுவந்துள்ள னர். ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்து, அவர்களுக்கு பென்சனை மறுத் துள்ளது. அரசாங்க பென்சனுக்காக ஏன் அலைகிறீர்கள் என்று ஆர்எஸ்எஸ்கார ரும் துக்ளக் பத்திரிகையின் ஆசிரிய ருமான ஆடிட்டர் குருமூர்த்தி பேசு கிறார்.பென்சனை இல்லாமல் செய்வ துதான் ஒன்றிய அரசின் நோக்கம். அரசின் ஊழியர் விரோதப் போக்கை போராட்டங்கள் மூலமாக முறிய டிப்போம் என்றார். பிரின்ஸ் கஜேந்திரபாபு பொதுப்பள்ளிக்கான மாநில மேடை யின் பொதுச்செயலானர் பிரின்ஸ் கஜேந்திரபாபு பேசுகையில், யாரை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும் என்ற தெளிவு வேண்டும். ஒன்றிய அரசை எதிர்த்து தெளிவுடன் போராட வேண்டும். முதலில் அரசு உதவிபெறும் பள்ளிகளை ஒன்றிய அரசு ஒழித்துக் கட்டும் வேலையை செய்யும்.பின்னர் அரசுப்பள்ளிகளை ஒழிப்பார்கள். 2030 ஆம் ஆண்டில் தமிழகத்தில் 90 சத வீத பள்ளிகள் இல்லாமல் போகும் ஆபத்து உள்ளது. ஆசிரியர்கள் அன்றாடம் மன உளைச்சலில் பணிபுரிவது சமூகத்திற்கு நல்லதல்ல.ஆசிரியர்களின் கோரிக்கை இந்த சமூகத்தின் கோரிக்கை.தொழி லாளி வர்க்கத்தின் கோரிக்கை என்றார்.
மோடி அரசு கொண்டு வந்த புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய தொடர் போராட்டங்களை நடத்துவோம்
மாநாட்டில் ஆர்.சச்சிதானந்தம் எம்.பி.,பேச்சு
மாநாட்டை துவக்கி வைத்து மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் பேசியதாவது: ஆசிரி யர்கள் என்பவர்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுப்பவர்கள்.இன்றைக்கு இந்திய சமூகத்திற்கு கற்றுக்கொடுத்தல் மிகவும் அவசியமாக உள்ளது.ஆசிரி யர் கூட்டமைப்பு தங்களுடைய பிரச்ச னைகளுக்காக போராடுவதோடு நின்று விடக்கூடாது. தேசம் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் பேச வேண்டும். மாணவர்கள்,பெற்றோர்கள் மத்தியில் கட்டாயம் உரையாட வேண்டும். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்த லில், 10 ஆண்டுகால மோடி ஆட்சிக்கு மக்கள் அங்கீகாரம் தரவில்லை என்ப தைத்தான் அதன் முடிவுகள் காட்டின. 93 தொகுதிகளை இழந்து பாஜக தோல்வி யடைந்திருக்கிறது. இந்திய தொழிலாளி வர்க்கம், விவசாயிகள் மோடி ஆட்சிக்கு பாடம் புகட்டியிருக்கிறார்கள். தெலுங்கு தேசம்,ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஊன்றுகோலு டன் பாஜக ஆட்சி நடத்திக்கொண்டிருக் கிறது.பாஜகவுக்கு தனிப்பெரும் பான்மை இல்லை.இன்றைக்கு நாடாளு மன்றம் நடக்கும் முறையே வித்தியாச மாக உள்ளது.தற்போது வெறும் 5 நாட்கள்தான் நாடாளுமன்றம் நடை பெற்றுள்ளது. அரசியலமைப்புச்சட்டம் உருவாக்கப் பட்டு, 75 ஆம் ஆண்டில் அதன் மாண்பு களை நாட்டு மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள்தான் கோரிக்கை விடுத்து, அத்தகைய விவாதம் நடை பெற்றுள்ளது. புதிய பென்சன் திட்டத்தை கொண்டு வந்தது மோடி ஆட்சி. அந்த ஆட்சி தேர்த லில் தோற்க ஆசிரியர்கள் முக்கியப் பங்காற்றியுள்ளனர். இந்த திட்டத்தை மாற்ற ஒன்றிய ஆட்சியாளர்கள் நடவ டிக்கை எடுக்கவில்லை. தொழிற்சங்கங் கள்தான் இதனை மாற்ற இயக்கங் களை நடத்த வேண்டும். புதிய கல்விக்கொள்கையை ஒன்றிய பாஜக ஆட்சி மாநிலங்கள் மீது திணிக் கிறது.நாடு முழுவதும் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது.அனைத் திலும் அவுட்சோர்சிங் முறையை திணிக்கிறது. 30, 35 ஆண்டுகளாக நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் பென்சன் கேட்டால், அவர்களின் ஊதியத்தி லிருந்து ஒரு பகுதியை கொடுத்தால்தான் பென்சன் வழங்குவோம் என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? ஒன்றிய ஆட்சியை எதிர்த்து போராட வேண்டியுள்ளது. வருங்கால சந்ததி யினருக்கான உங்களது கோரிக்கை கள் வெற்றிபெறும். பழைய பென்சன் திட்டம் உட்பட மத்திய தர ஊழியர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறை வேற்றித்தர வேண்டும் என்று இந்த மாநாட் டின் மூலம் கோரிக்கை வைக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.