சென்னை, மார்ச் 23- விருதுநகரில் பட்டியலின இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு 60 நாட்களில் விசாரணையை முடித்து நாட்டிற்கே முன்மாதிரியான நீதியை பெற்றுத் தருவோம் என்று சட்டப்பேர வையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, பொள்ளாச்சியில் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடந்த 2019 ஆம் ஆண்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்யகோரி ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்கள் ஆகியவை நடத்தப்பட்டன. இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை நினைவுபடுத்து வது போல விருதுநகரிலும் தற்போது கும்பல் பாலியல் சம்பவம் நடை பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவரை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி, பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் படம் பிடித்து நண்பர்களுக்கு அனுப்பிய மேலத்தெருவை சேர்ந்த ஹரிஹரன் (27) என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடப் போவ தாக மிரட்டி அப்பெண்ணை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துவந்த செந்தில் விநாயகம் தெருவைச் சேர்ந்த ரைஸ் மில் உரிமையாளர் மகன் ஜூனத் அகமது (27), முத்தால் நகரைச் சேர்ந்த மாடசாமி, ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் ஆகியோரை பாண்டியன் நகர் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், இதேபோல் அப்பெண்ணை மிரட்டி கும்பல் பாலியல் வன்கொடு மைக்கு ஆளாக்கிய 9 ஆம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 4 பேரும் கைது செய்யப் பட்டனர். சிறுவர் கள் இளைஞர் நீதிக் குழுமம் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு, மதுரை அரசு கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப் பட்டுள்ளனர். ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரும் ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப் பேரவையில் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தார். இதற்கு பதில் அறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப் பட்டு வருகிறது” என்றார். காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காத வகையில் கண்காணிக் கப்படும் என்றும் முதலமைச்சர் கூறினார். பொள்ளாச்சி சம்பவம், சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல் அல்லாமல் விருதுநகர் சம்ப வத்தில் நீதி நிலை நாட்டப்படும். சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அனைவ ருக்கும் உரிய தண்டனை பெற்றுத்தரப் படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது. 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். இந்த வழக்கில் பெற்றுத் தரப்படும் நீதி, பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் எத்தகைய தண்டனை வழங்கப்படும் என்பதற்கு தமிழ்நாடே முன்மாதிரியாக இருக்கும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.