பிற மாநிலங்கள் எல்லாம் தமிழ்நாட்டைப் பின்பற்றுகிற வகையிலான ஆட்சியை முதல்வர் ஸ்டாலின் அமைத்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காகத் தமிழக முதல்வர் காலை உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். இதை கனடா பிரதமரும் தன்னு டைய நாட்டில் கொண்டு வந்து பாராட்டுகிறார். ஜனநாயகமா, சர்வாதிகாரமா; பாசிசமா, குடியரசு ஆட்சியா என்பதை தீர்மானிக்கிற ஒரு போர்க் களத்திலே நாம் நின்று கொண்டிருக்கிறோம். அவர்கள் வெற்றி பெற்று விடலாம் என்ற ஆணவத்தில் இருக்கின்றனர். இந்தியாவில் உள்ள இந்துத்துவ சனாதன சக்திகள் ஒன்றிணைந்து மாநாடு நடத்தி, அதில் அரசியல் சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திவிட்டு, மனு நீதியைச் சட்டமாகக் கொண்டு வருவோம் என்றும், நம் நாட்டின் தலைநகராக வாரணாசியை அறிவிப்போம் எனவும், முஸ்லிம்களுக்கு வாக்குரிமை கிடையாது எனவும் தீர்மானித்தனர். இவ்வளவு பேரபாயம் இருப்பதை மக்கள் அனைவரும் உணர்ந்து, ஜனநாயகத்தை காக்கும் கடமையை மேற்கொள்ள வேண்டும்.