உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் பேச்சு
நீதித்துறையின் பங்கு சட்டத்தை நிலைநாட்டுவதாகும். நிர்வாகம் (அரசு) அதனைத் தடுக்காமல் (நீதித் துறையின் செயல்பாட்டுக்கு) உதவி செய்ய வேண்டும். பிரச்சனைகளின் வேர்களைக் கண்டறிந்து அதனைச் சரிசெய்ய சட்டம் எப்போதும் உணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும்.
கவுகாத்தி, ஏப்.8- சட்டம் என்பது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் விதமாகவும், மனிதநேய தொடுதலை கொண்டதாகவும், பிரச்சனைகளின் வேர் வரை சென்று அதற்கான தீர்வு காணும் உணர்வு டன் கூடியதாகவும் இருக்க வேண் டும் என்றும் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தெரிவித்துள்ளார். கவுகாத்தி உயர் நீதிமன்றத்தின் 75-ஆவது ஆண்டு ‘பிளாட்டினம்’ விழா வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. இதில், உச்ச நீதி மன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கலந்து கொண்டு பேசி யிருப்பதாவது: சட்டமானது, அது நடைமுறைப் படுத்தப்பட விரும்பும் சமூகங்களின் யதார்த்தங்களைக் கருத்தில் கொள்ள வேண்டும். சட்டம் சிறந்த முறையில் விளக்கப்பட்டு நடை முறைப்படுத்தப்படும் போது, மக்க ளும், சமூகக் கட்டமைப்பின் மீது நம் பிக்கை வைத்து, நீதியை நிலை நாட்டுவதற்கான பணிகளில் ஈடுபடு வார்கள். நீதித்துறை சுதந்திரமாக செயல்படும் போது, அது மக்களின் நம்பிக்கை மற்றும் உறுதித்தன்மை யை பெறுகிறது. சாமானிய மனிதர் தன் பிரச்சனை யை நீதித்துறை அணுகல் மூலம் தீர்க்க நினைக்கும் எண்ணத்தின் மூலமே நீதித்துறை மீதான மக்க ளின் நம்பிக்கை தீர்மானிக்கப்படு கிறது. சட்டம் என்பது மனிதாபிமா னத்தை தொடும் வகையில் இருக்க வேண்டும்.
அனைவரின் தேவை களையும் நிவர்த்தி செய்ய சட்டத் தில் மனிதநேய தொடுதல் அவசி யம். சட்டம் மனிதாபிமானத்துடன் ஊட்டப்பட வேண்டும். சமத்துவம் மற்றும் பன்முகத்தன்மைக்கு பச்சா தாபமும் மரியாதையும் இருக்க வேண்டும். நீதித்துறையின் பங்கு சட்டத்தை நிலைநாட்டுவதாகும். நிர்வாகம் (அரசு) அதனைத் தடுக்காமல் (நீதித் துறையின் செயல்பாட்டுக்கு) உதவி செய்ய வேண்டும். பிரச்சனை களின் வேர்களைக் கண்டறிந்து அத னைச் சரிசெய்ய சட்டம் எப்போ தும் உணர்வுடன் பயன்படுத்தப்பட வேண்டும். அது அனைத்து சமூ கங்களின் உண்மைகளைக் கருத் தில் கொள்ள வேண்டும். நீதிக்கான அரசியலமைப்பு பாதையை, அதன் முகவுரை தெளிவு படுத்துகிறது. முகவுரையில் உள்ள சகோதரத்துவம், சுதந்திரம் மற்றும் சமத்துவத்தின் அளவுருக்கள் நமது தேசத்தின் ஒற்றுமை மற்றும் சமூக கட்டமைப்பின் ஸ்திரத்தன்மைக் கான உறுதியை வழங்குகின்றன. அரசின் மூன்று கைகளான நிர் வாகம், சட்டமன்றம் மற்றும் நீதித் துறை ஆகியவை தேசத்தைக் கட்டி யெழுப்புவதற்கான பொதுவான பணியில் ஈடுபடுகின்றன. அரசியல மைப்பு சார்ந்த அரசாட்சிக்கு விவா தங்களும் உரையாடல்களும்தான் அவசியமே தவிர, இவற்றுக்கு பொதுவான மகத்துவம் இல்லை. இவ்வாறு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் கூறியுள்ளார்.