திருப்பூர், ஜூன் 19– திருப்பூரில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோபால் நகர் கிளை அலுவலக புதிய கட்டிட மான தோழர் ஏ.கே.கோபாலன் நினை வகத்தை ஜுன் 18 ஞாயிறன்று மாலை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும், மதுரை நாடாளு மன்ற உறுப்பினருமான சு.வெங்க டேசன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து வெள்ளி யங்காடு நால்ரோட்டில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சு.வெங்க டேசன் எம்.பி., பேசுகையில், மத்தி யில் ஆளும் பாரதிய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ். சங் பரிவார் கூட்ட மும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மணி நேரமும் வெறுப்பையும், வதந்தியையும் பரப்பிக் கொண்டிருக் கின்றனர். மக்களின் அரசியல் விழிப்புணர்வு மட்டுமே இந்த மண்ணையும், மக்களையும் காப்பாற்றும். கடந்த 20 ஆண்டு காலத்தில், குறிப்பாக, கடந்த பத்தாண்டு காலத்தில் திருப்பூர் பின்னலாடை தொழில் நலிவை சந்தித்துள்ளது. ஆனால், வாய் கிழிய பேசும் மோடி அரசு இந்த தொழிலை காப்பாற்ற எந்த உதவியும் செய்யவில்லை. வங்கதேசம், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் பின்னலாடை ஏற்றுமதிக்கு, அந்த நாட்டு அரசுகள், ஐரோப்பிய நாடுகளிடம் அமெரிக்காவிடம் வரி விலக்கு பெற்று தந்திருக்கின்றன.
ஆனால், திருப்பூர் தொழிலுக்கு எந்த ஒரு நாட்டிடமும் மோடி அரசு வரிவிலக்கு பெற்றுத் தரவில்லை. அதற்கு மாறாக மோடி தனது நண்பர் அதானிக்கு பல நாடுகளில் வரி விலக்கு, சலுகைகளை பெற்றுத் தந்திருக்கிறார். ஒன்றிய அரசின் கொள்கைகள் தான் திருப்பூரில் நெருக்கடிக்கு முக்கிய காரணம். இந்த நாடு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்கு மூன்று உதாரணங்களை கூற முடியும். உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஒரு பெண்ணை காதலித்து, அவரை கர்ப்பிணியாக்கி, திருமணத்திற்கு மறுத்த ஆண் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்படுகிறது. அந்த ஆண் திருமணத்திற்கு மறுத்த தற்கு அப்பெண்ணிற்கு செவ்வாய் தோஷம் இருக்கிறது என்று நீதிமன்றத் தில் காரணம் கூறியிருக்கிறார். நீதி மன்றமும் அப்பெண்ணுக்கு செவ்வாய் தோஷம் இருக்கிறதா? என்று ஆய்வு செய்யும் படி பல்கலைக் கழக ஜோதிட பிரிவிற்கு உத்தர விடுகிறது. இப்பிரச்சனையில் உட னடியாக தலையிட்ட உச்சநீதி மன்றம் உத்தரப்பிரதேசம் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து இருக் கிறது. ஒரு பெண்ணை ஏமாற்றிய வழக்கில் சட்டப்படி தீர்ப்பு வழங்க வேண்டிய நீதிமன்றம் செவ்வாய் தோஷத்தை ஆய்வு செய்யச் சொல் கிறது. எங்கே போகிறது இந்த நாடு?
மந்திரம் சொன்னால் உதவித்தொகை
இந்திய மருத்துவ ஆய்வு கழகம் (ஐசிஎம்ஆர்) என்ற அமைப்பு மருத்துவ மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்குகிறது. ஆனால், சுயநினைவு இல்லாதவரை எழுப்புவதற்கு மகா மிருதன்ய ஜெய மந்திரம் சொன்னால் சுய நினைவு திரும்பிவிடும் என்று சொல்லி, அதற்கு ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு மாதம் ரூ.28 ஆயிரம் கல்வி ஊக்கத்தொகை தரப்பட்டிருக்கிறது. மோடி சமீபத்தில் நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை திறந்து வைத் திருக்கிறார். அங்கே அரசியல் சாச னத்தின் பன்முகத்தன்மை இல்லை. நம் தேசத்தின் மிகச்சிறந்த முன்னு தாரணம் கொண்ட அரசியல் சாசனம் அங்கு இல்லை. மாறாக 40 அடி உயரத்திற்கு சாணக்கியன் உருவம் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு எதிரில் தலைகுனிந்து நிற்கும் மகாத்மா காந்தியின் படம் வைக்கப் பட்டுள்ளது. இது ஒரு குறியீடுஆகும். ஒரு மன்னன் ஒரு நாட்டை எப்படி ஆட்படுத்த வேண்டும். எப்படி கட்டுக் குள் வைத்திருக்க வேண்டும். அதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று சொன்னவர் சாணக்கியன். அவனுக்கு முன்பாக மகாத்மா தலைகுனிந்து நிற்கிறார். வெறுப்பு, பிளவு, பகைகளை உரு வாக்கலாம். சாதி, மத, மூட நம்பிக்கை, கடவுள் நம்பிக்கையை பயன்படுத்தலாம் என்று செயல் படும் ஒன்றிய பாஜக அரசின் மூலக்கருத்து சாணக்கியனிட மிருந்து தான் வந்திருக்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இந்த நாட்டிற்காக பாடுபட்ட அண்ணல் அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், ஜவஹர்லால் நேரு, திப்பு சுல்தான் போன்றவர்கள் படம் இல்லை. மாறாக முனிவர்கள், ரிஷி கள், தேவர்கள், அசுரர்கள் படங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே, இந்தியாவின் மாண்பை யும் சிறந்த மரபையும் சிதைக்கும் மோடி அரசை நாம் வீழ்த்தவேண் டும். அதற்கு நாம் கம்பீரமாக எழ வேண்டும். இவ்வாறு சு.வெங்க டேசன் கூறினார்.