அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை நசுக்குகின்ற எதேச்சதிகார அமைப்பை அகற்ற வேண்டும். இதற்கு தேவை:
* உயர்நீதித்துறை, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் பிற அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங் களின் சுதந்திரம் / சுயாட்சியைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள்.
* சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) மற்றும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் (AFSPA) ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்.
* மோசமான விதிகளைக் கொண்டுள்ள பண மோசடி தடுப்புச் சட்டத்தை (பி.எம்.எல்.ஏ.) ரத்து செய்ய வேண்டும். அமலாக்கத்துறையிடமிருந்து அதன் சட்ட அமலாக்க அதிகாரங்கள் பறிக்கப்பட வேண்டும்.
* காவல்துறை அதிகாரங்களை அதிகரிக்கும் ஜனநாயக விரோத பிரிவுகளை அகற்றுவதற்கும் 3 குற்றவியல் சட்டங்களை முழுமையாக மறுபரிசீலனை செய்து திருத்துதல்; மாற்றுக் கருத்து தெரிவிக்கும் உரிமையைப் பாதுகாக்க வேண்டும்.
* மரண தண்டனையை சட்டங்களில் இருந்து நீக்க வேண்டும்.
* பொதுத் திட்டங்களின் தாக்கம் மற்றும் செயல்திறனை மதிப்பிடுவதற்கு கட்டாய சமூக தணிக்கை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான சட்டங்களை இயற்றுதல். இது நிர்வாகத்தின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேலும் அரசாங்கத்தை அதன் ஆணைக்கு பொறுப்புக்கூற வைக்க ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும்.
* அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கும் ஆதார் மற்றும் உடல் அடையாளப் பதிவு (பயோமெட் ரிக்ஸ்) கட்டாய பயன்பாட்டை ரத்து செய்தல்.
* சித்ரவதை மற்றும் ஏனைய கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவாக நடத்துதல் அல்லது தண்டனைக்கு எதிரான ஐ.நா. மாநாட்டு முடிவினை அங்கீகரித்தல்.
* எந்தவொரு சர்வதேச உடன்படிக்கைக்கும் நாடாளுமன்ற அங்கீகாரத்தை கட்டாயமாக்கும் வகையில் அரசியலமைப்பை திருத்த வேண்டும்.