tamilnadu

img

துணிப்பை கொண்டு செல்லத் துணிவோம்! - ஆர்.ஜெயசீலன்

ஆர்.ஜெயசீலன்  சமீபத்தில் பொது  மக்கள் நலன் சார்ந்த இயக்கம் சார் பில் நண்பர்கள் வாயி லாக நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ் வில் ஆசிரியர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் என சுமார் நுாற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்ட அரங்கில் புத்து ணர்வுக்காக அனைவ ருக்கும் நெகிழிக் குவளைகளில் தேநீரும் காகித துண்டுகளில் வடையும் வைத்து வழங்கப்பட்டது, அனைவரும் வடையை தின்று தேநீர் அருந்திவிட்டு நிகழ்ச்சியில் சிறப்புரை மற்றும் வாழ்த்துரை வழங்கியவர்களின் கருத்துகளை கேட்க  தொடங்கினர். நிகழ்ச்சியில் ஆசிரிய நண்பர் ஒருவர் தனது வாழ்த்துரை தொடங்கும் போது நான் எனக்கு வழங்கப்பட்ட தேநீரையும் வடை யையும்  தான் திங்கவில்லை என்று அவர் கூறியபோது மிதமான சிரிப்பலை கூட்டத் தில் எழுந்தது என்றாலும பின் அதற்கான கார ணத்தை அவர் கூறியபோது அனைவரையும் அது சற்று சிந்திக்க வைப்பதாகவே இருந்தது.

 நண்பர் இவ்வாறு  தனது விளக்கத்தை  கூறினார். அறிவியல் சார்ந்த விழிப்புணர்வு  ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த நிகழ்ச்சி யில் கலந்து கொண்டு நாம் நெகிழி குவளை களில் தேநீர் அருந்துவது எப்படி நியாய மாகும் மேலும் காகிதத்துண்டுகளில் உள்ள  வேதிப்பொருட்களாலான “மை” எழுத்துக் கள் வடையோடு வயிற்றின் உள்ளே   சென்று  ஆபத்தை விளைவிக்கும் என்று தெரிந்தும்  நாமே அதை  உண்டால் பொதுமக்களுக்கு எவ்விதம் நாம் எடுத்துக்கொண்ட கருத்துக் களை எளிதில் சென்றடையச் செய்ய முடியும். எனவே தான் அந்த தவறுகளை செய்யவில்லையென்றும்  அதற்கேற்ப கடந்த ஆறு ஏழு ஆண்டுகளாக நெகிழி  மற்றும் அதைச் சாரந்த பொருட்களை பயன்படுத்தவும் இல்லையென்று விளக்கினார்.

உண்மையில் அவர் கூறிய கருத்துக் களை அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நிலை அங்கு உருவானது என்றால் சந்தேகமில்லை. காரணம் சமுதாயத்தில் சிறு மாற்றம் ஏற்பட வேண்டுமென்றாலும் கூட அதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது தனிமனித முயற்சியும் மனமாற்றமுமே அதுவே சமூகத்தில் அளப்பரிய அறிவியல் கண்டுபிடிப்புகள்  உருவாகவும் பல துறைகளில் நல்லதொரு பொருளாதார வளர்ச்சி ஏற்படவும் காரண மாக  உள்ளது. “சிறு துரும்பும் பல்குத்த உதவும்” என்பது போல் சுற்றுச்சூழல் முன் னேற்றத்தை கருத்தில் கொண்டு நாம்  ஒவ்வொருவரும் மேற்கொள்ளும் சிறு முயற்சிகள் கூட நாம் வாழும் புவிக்கு பெரிதும் கை கொடுக்கக் கூடியனவாக இருக்கும் என்பதில்  ஐயமில்லை. ஆசிரிய நண்பர் அந்த சிறு கூட்டத்தில் கூறியது போல் நெகிழி மற்றும் அது சார்ந்த பொருட்களால் ஏற்படும் மனித. கால்நடை பாதிப்பு  மற்றும் சுற்றுச் சூழல் பாதிப்பு ஆகியவைகளால் ஏற்படும் பதிப்பு ஆபத்து போன்றவை குறித்து நாம் நன்க றிந்தும் இன்றளவும் அவை முற்றிலுமாக ஓழிக்க முடியாததற்கு காரணம் தனிமனித  அலட்சியமே! ஒவ்வொருவரும் நெகிழிப் பொருட்களின் பாதிப்புகள் குறித்து படித்துவிட்டும் பேசிவிட்டும் செல்வதோடு இருப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளோம்.

நம்மில் எத்தனை பேர் கடைகளுக்கு மளிகைச்சாமான்கள் வாங்கச் செல்லும் போது கையில் துணிப்பையை எடுத்துச் செல்கிறோம் அல்லது டீ கடைகளுக்குச் செல்லும் போது தேநீர் வாங்குவதற்கு ஏதுவாக கையில் ஏதாவது பாத்திரம் எடுத்துச் செல்கிறோம்  என்றால் அது பெரும்பாலும் இல்லாத நிலையே உள்ளது. அத்தகைய செயல்களைப்  பின் பற்ற முடியாத அளவிற்கு நெகிழிப் பொருட்களுக்கும் அதன் பயன்பாட்டும் மனதை பறிகொடுத்து சுற்றுச் சூழலை  மாசு படுத்துவதையே வாடிக்கையாக்கி விட்டோம். காலத்தின் கட்டாயத்தையும் புவிப்பந் தின் நலனையும் உயிர்களின் நலனை யும் கருத்தில் கொண்டு இயற்கைக்கு பாது காப்பளிக்கும் வகையில் அனைவரும் துணிப்பை பயன்படுத்தும் வகையில் “மஞ்சப்பை” இயக்கத்தை அரசே முன்னேடுத்திருப்பது வரவேற்கதக்கது. இனி ஒவ்வொரு தனி மனிதனும் தன்நலம் குடும்பநலத்தையும் கருத்தில் கொள்வதோடு எந்தப் பொருள் வாங்க கடைக்குச் சென்றாலும் பொருள் வாங்கு வதற்கு ஏதவாக கையில் ஏதாவதெரு துணிப்பையோடு செல்வோம். நெகிழிக் குவளைகளில் தேநீர் அருந்துவதை தவிர்ப்போம் சுற்றுச்சூழலைக் காக்க உறுதியேற்போம்.