tamilnadu

“இங்கே அமர்ந்திருக்கும் போது மதமற்றவர்களாகி விடுகிறோம்.”

“இங்கே அமர்ந்திருக்கும் போது மதமற்றவர்களாகி விடுகிறோம்.”

மூத்த வழக்கறிஞர் பி.வி. தினேஷ் நெகிழ்ச்சி

புதுதில்லி, ஏப்.19- வக்பு சட்டத் திருத்தம் தொடர்பான மனுக்களை பரி சீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா  வெளியிட்ட தனித்துவமான அறிக்கையைச் சுட்டிக் காட்டி, உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.வி. தினேஷ்  தனது முகநூலில் கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: வக்பு சட்டத்தில் திருத்தம் செய்வது தொடர்பான மனுக்கள், வெள்ளி யன்று (ஏப்.17) பரிசீலிக்கப்பட்டன. விசாரணையின் போது, தலைமை நீதிபதி ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கை, ‘நாம் இங்கே அமர்ந்தி ருக்கும்போது, நாம் மதமற்றவர்களாக மாறுகிறோம், மதச்சார்பின்மையை பராமரிக்கிறோம்’ என்பது தான்  அந்த அறிக்கை... இதுதான் இந்த நாட்டின் அழகு.  வழக்கறிஞர்கள் மற்றும் நீதிபதிகளின் மதத்தைக் குறிப்பிடுவது சரியல்ல.  அப்படியும் கூட, வக்பு சட்டத்திற்கு எதிராகப் பேசிய  வழக்கறிஞர்களில், 99 சதவிகிதம் பேர் இந்துக்கள். மேலும் அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரு வதைக் கேள்வி எழுப்பிய நீதிபதிகளும் இந்துக்கள்... என்றாலும் தங்களுக்கு முன்னால் இருக்கும்  ஒரே ஒரு ஆவணத்தால் அவர்கள் வழிநடத்தப்படு கிறார்கள் - அது இந்திய அரசியலமைப்புச் சட்டம். குடியரசு வெல்லும். இவ்வாறு மூத்த வழக்கறிஞர் பி.வி. தினேஷ் குறிப்  பிட்டுள்ளார்.