tamilnadu

img

தொழிலாளர் விரோத சட்டங்களை எதிர்த்து களமாட உறுதியேற்போம்!

 சென்னை, மே 1- தொழிலாளர் விரோத சட்ட தொகுப்பு களை எதிர்த்துகளமாட மே தினத்தில் உறுதி யேற்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல் திருமா வளவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள மே தின செய்தி வருமாறு: அமெரிக்க தேசத்தின் சிகாகோ வீதிகளில் நடந்த தொழிலாளர்களின் போரா ட்டம்தான் எட்டுமணி நேர வேலை உள்ளிட்ட பல உரிமைகளை மீட்டளித்தது. எனினும், இந்திய தொழி லாளர் வர்க்கம் இன்று நுகரும் உரிமைகள் யாவும் புரட்சியாளர் அம்பேத்கரின் கடின உழைப்பால் விளைந்தவையே ஆகும். அவரது பங்களிப்பை இந்நாளில் நினைவுகூர்ந்து அவருக்கு நன்றிக் கடன் செலுத்த வேண்டியது நமது இன்றியமையாத கடமை யாகும்.  அவரைச் சாதிய அடையாளத்துக்குள் சுருக்கிடும் அறியாமை யிலிருந்து இந்திய மக்கள் விடுபடுவதும் உடனடியான தேவையாகும். இன்றைய மோடி தலைமையிலான சங்பரிவார் அரசு, தொழிலாளர்களின் அனைத்து உரிமைகளை யும் பறிக்கும் வகையில் ஏற்கனவே நடைமுறை யிலிருந்த 44 தொழிலாளர் சட்டங்களையும் மாற்றி 4 சட்டங்களாக தொகுத்து ள்ளது. இது எட்டுமணி நேர வேலை என்னும் உரிமை யைப் பறிக்கிறது. தொழிற் சங்கத்தில் இணைந்து செயல்படும் உரிமையைப் பறிக்கிறது. இன்னும் பிற பாதுகாப்பு உரிமைகளையும் பறிக்கிறது.ஒட்டு மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களின் நலன்களை முன்னிறுத்துகிறது. புரட்சியாளர் அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு நேரெதி ராக மோடி அரசு பாசிசப் போக்கில் இச்சட்டத் தொகுப்புகளைக் கொண்டு வந்துள்ளது. இதனை வெகுவாக மக்களைத் திரட்டி எதிர்த்திட, போரிட இந்நா ளில் உறுதியேற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.