tamilnadu

கம்யூனிஸ்ட் கட்சியிடம் மன்னிப்பு கோருகிறோம்

டோக்கியோ, மார்ச் 1- அதிதீவிர வலதுசாரிக் கட்சி யுடன் இணைந்து செயல்பட எடுத்த முடிவை திரும்பப் பெறுவதாக ஜப்பானின் ஜப்பான் அரசியலமை ப்பு ஜனநாயகக் கட்சி அறிவித் துள்ளது.  ஜப்பானில் நிப்பான் இஷின் நோ கை என்ற அதி தீவிர வலதுசாரிக் கட்சி 2015 ஆம் ஆண்டில் உரு வாக்கப்பட்டது. ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் கொமேய் கட்சிகள் மக்களை ஏமாற்றுவதாகச் சொல்லி, வலது சாரித் தளத்தில் தன்னை நிறுத்திக்  கொண்டு அணி திரட்டி வருகிறது. ஏற்கனவே ஜப்பான் மக்களை வாட்டி வரும் மோசமான பொருளா தாரக் கொள்கைகளைத் தீவிரப் படுத்த வேண்டும் என்பதே இஷின் கட்சியின் கருத்தாக இருந்து வரு கிறது. அதே வேளையில், ஆளும் கூட்டணியுடன் இணைந்தும் செயல் பட்டு வருகிறார்கள். இதற்கு மாற்றாக ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி உள் ளிட்ட ஐந்து கட்சிகள் மாற்று அணியை உருவாக்கி செயல்பட்டு வருகின்றன.

நாடாளுமன்றத் தேர்தலிலும் இக்கட்சிகள் இணைந் தே போட்டியிட்டன. தங்களுக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்து இக் கட்சிகள் பரிசீலனை செய்து வரு கின்றன. இக்கட்சிகளுக்குள் ஆழ மான விவாதங்களும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஐந்து கட்சிக் கூட்டணியில் பிரதான கட்சிகளில் ஒன்றான ஜப்பான் அரசியலமை ப்பு ஜனநாயகக் கட்சி, அதிதீவிர இஷின் கட்சியுடன் இணைந்து செயல்படப் பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக செய்திகள் வெளியாகின. இதற்கு ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரி வித்தது. ஆளும் கூட்டணிக் கட்சிக ளின் துணைக்கட்சிதான் இந்த இஷின் கட்சி என்பதுதான் ஐந்து கட்சிக் கூட்டணியின் கருத்து என் றும், அதில் இதுவரையில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டியது. இதை ஏற்றுக் கொண்டுள்ள ஜப்பான் அரசியலமைப்பு ஜன நாயகக் கட்சி, இஷின் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவ தில்லை என்றும், இத்தகைய நிலை ஏற்பட்டதற்காக ஜப்பான் கம் யூனிஸ்ட் கட்சியிடம் மன்னிப்புக் கோருவதாகவும் அறிவித்திருக்கி றது. ஜப்பான் கம்யூனிஸ்ட் கட்சி இல்லாமல் தங்கள் அரசியல் கூட்டணி இருக்காது என்று தெளிவுபடுத்தியுள்ளது.