சேலம், ஜூன் 10- குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து திங்களன்று (ஜூன் 12) காலை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்காக சேலம் சென்றுள்ளார். ஞாயிறன்று காலை 9 மணிக்கு சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி முழு உருவ வெண்கல சிலையை திறந்து வைக்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 96.53 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையத்தை திறந்து வைக் கிறார். அதன்பிறகு கருப்பூர் அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் பங்கேற்கிறார். இந்த விழாவில் ரூ.33.60 கோடியில் மறு சீரமைப்பு செய்யப்பட்ட நேரு கலையரங்கம் ரூ.10.58 கோடியில் மறு சீரமைக்கப் பட்ட போஸ் மைதானம், ரூ.12.34 கோடி யில் ஆனந்தா பாலம் வாகன நிறுத்து மிடம், ரூ.14.97 கோடியில் வ.உ.சி மார்க்கெட், புது பேருந்து ஸ்டாண்ட் அருகே ரூ.13.04 கோடியில் அடுக்கு மாடி வாகன நிறுத்துமிடம், ரூ.12 கோடி யில் தொங்கும் பூங்காவில் கட்டப்பட் டுள்ள வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட வைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைக்கிறார். அவினாசி பேரூராட்சி மன்ற அவசர கூட்டம் மேலும் முடிவுற்ற வளர்ச்சி திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கி றார். அதே போல புதிய திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார். விழாவில் 50 ஆயிரம் பேருக்கு நல உதவிகளையும் அவர் வழங்குகிறார். ஞாயிறன்று பிற்பகல் 4 மணிக்கு மேல் மேட்டூருக்கு புறப்பட்டு செல்லும் அவர், அங்குள்ள விருந்தினர் மாளிகை யில் தங்குகிறார். அப்போது கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை வழங்குகிறார். 12-ந் தேதி காலை 10 மணிக்கு குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். பின்னர், சேலத் தில் இருந்து விமானத்தில் சென்னை திரும்புகிறார்.