திருவில்லிபுத்தூர், நவ.29- திருவில்லிபுத்தூர் நகரில் பெய்த கனமழையால் வாய்க்கால்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது கல்லணை ஓடை, ரைட்டன்பட்டி, குலாலர்தெரு, ஆத்துக் கடை தாழ்வான பகுதிகளில் உள்ளது. சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது மேற்கு தொடர்ச்சி மலை செண்பகத்தோப்பு பகுதியில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளது. பேயனாற்றில் வெள்ளப்பெருக்கால் செண்பகத் தோப்பு வன பகுதிக்குள் யாரும் செல்லக்கூடாது என தடை விதித்து உள்ளனர் திருவில்லிபுத்தூர் பகுதியில் இடை விடாமல் பெய்த கன மழை காரணமாக திருவில்லி புத்தூரை சுற்றி உள்ள கண்மாய்களில் நீர்வரத்து அதிக ரித்து கண்மாய்கள் நிரம்பி வருகின்றன.