சேலம், ஜூன் 11- சேலம் ஈரடுக்கு பேருந்து நிலையம் உள் ளிட்ட முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட் டிற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயி றன்று திறந்து வைத்தார். அதனைத்தொடர்ந்து குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையிலி ருந்து திங்களன்று (இன்று) தண்ணீரை முதல்வர் திறந்து வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சேலம் பழைய பேருந்து நிலையம் பகுதி, சீர்மிகு நகர திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட்டு புதிய ஈரடுக்கு மேம்பாலமாக ரூ.96.53 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்டது. அதனை ஞாயி றன்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இந்த ஈரடுக்கு பேருந்து நிலை யத்திற்கு “முத்தமிழறிஞர் கலைஞர் மு.கரு ணாநிதி நூற்றாண்டு மாநகர பேருந்து நிலை யம்” என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, சீரமைக்கப்பட்ட போஸ் மைதா னம், வணிக வளாகம், வஉசி பூ மார்க்கெட், பெரி யார் பேரங்காடி, நேரு கலையரங்கம் ஆகிய வற்றையும் திறந்து வைத்தார். இதன்பின் கருப் பூர் அரசு பொறியியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.236 கோடி மதிப் பீட்டிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 50 ஆயிரத்து 202 பயனாளி களுக்கு ரூ.170.31 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசு கையில், முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றதன் மூலம் ரூ.3 ஆயிரம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. சேலம் மாநகரில் கலை ஞர் சிலையை திறந்து வைத்துவிட்டு ஒரு மன நிறைவோடு வந்திருக்கிறேன். அண்ணாவின் பூங்காவில் பூத்த மலர்தான் கலைஞர். சேலம் மாவட்டத்திற்கு திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். கடந்த 2 ஆண்டுகளில் வந்ததைவிட, கூடுதல் திட்டங் களை சேலத்திற்கு கொண்டு வர உள்ளோம். 50 ஆண்டு கால கனவான சேலம் ரயில்வே கோட்டம், பெரியார் பல்கலைக்கழகம், மக ளிர் கலைக்கல்லூரி, ஆத்தூர் அண்ணா கலைக் கல்லூரி, அதிநவீன சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங் களை கடந்த கால திமுக ஆட்சியில் நிறை வேற்றியுள்ளோம். இந்த வரிசையில் தற்போ தைய ஆட்சியும் செயல்பட்டு வருகிறது. கருப்பூரில் மினி டைடல் பூங்கா, வெள்ளிக் கொலுசு தொழிலுக்காக பன்மாடி உற்பத்தி மையம் அடிக்கல் நாட்டப்பட்டும் பணிகள் தொடங்கியுள்ளன. தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க மாபெரும் ஜவுளி பூங்கா அமைக்க அம்மாபாளையத்தில் 110 ஏக்கரில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.880 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா அடிப்படை கட்ட மைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. ரூ.52 கோடி மதிப்பில் மூன்று ஏரிகள் புனர மைக்கப்பட உள்ளன. அம்மாபேட்டை பகுதி யில் ரூ.120 கோடி மதிப்பில் ரயில்வே பாலங்கள் அமைக்கப்படும். ரூ.20 கோடி மதிப்பில் பல் நோக்கு விளையாட்டு மையம் அமைக்கப்படும். மேட்டூர் அருகேயுள்ள பாலமலை கிராமத்திற்கு தார்ச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இளம்பிள்ளை கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.650 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 778 குடியிருப்புகளுக்கு குடிநீர் கிடைக்கும். முதல்கட்டமாக 301 குடியிருப்பு களுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. சேலம் அரசு சட்டக்கல்லூரிக்கு நிரந்தர கட்டடம் கட்டப்பட்டுள்ளது. உழவர்கள் வாழ்வாதா ரத்தை மேம்படுத்த குறுவை சாகுபடிக்கு மேட்டூ ரிலிருந்து திங்களன்று (இன்று) தண்ணீர் திறக் கப்பட உள்ளது. தொடர்ந்து 3 ஆவது ஆண்டாக குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்கப்படுகிறது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் முந்தைய அதிமுக ஆட்சி பல்வேறு திட்டங்களில் கையெ ழுத்திட்டனர். கண்ணை மூடிக்கொண்டு நீட் டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்ட தால்தான் நிதி நெருக்கடியில் தவிக்கிறோம். நிதி இல்லை என்று காரணம் காட்டி புதிய திட்டங்கள் அறிவிக்காமல் இல்லை. 5 ஆண்டு கள் அறிவிக்க வேண்டிய திட்டங்களை 2 ஆண்டு களிலேயே அறிவித்துள்ளோம். இதனால் நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் கிடைத்துள்ளது. வள மான எதிர்காலத்தை நோக்கி தமிழகம் நடை போடுகிறது. இதை வெளிச்சம் போட்டு காட்டி னால்தான், பல்வேறு நிறுவனங்கள் நம்மை நோக்கி வருவார்கள். ஆனால், அதைக்கூட தமிழ்நாட்டை பாழ்படுத்த நினைக்கும் கூட்டம் கொச்சைப் படுத்துகிறார்கள். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களால் அழிக் கத்தான் முடியும் ஆக்க முடியாது. இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ரகுபதி, மதிவேந்தன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதி நிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.