tamilnadu

img

கனிவான நரிக்கூட்டம் - விழியன்

விழியன்  காட்டில் இருக்கும் ஒரு மரத்தின் மேலே நான்கு பேர் தங்குவது போல ஏற்பாடு இருந்தது. என்னைத்தவிர மற்ற மூன்று பேரும் ஃபோட்டோகிராபர்கள். நான் காடு எப்படி இருக்கின்றது என்று பார்க்கச் சென்றிருந்தேன். இரவு அந்த மரத் தின் மீது தான் தூங்க வேண்டும். எங்களை  அங்கே அழைத்துச் சென்ற உதவியாளர்கள், “சார், என்ன சத்தம் வந்தாலும் கீழ இறங்கா தீங்க” என்று எச்சரித்துச் சென்றார்கள். கைக ளில் இருந்த டார்ச் வெளிச்சத்தில் இரவு உண வினை உண்டோம். சமைத்த உணவு அல்ல, வெறும் பழங்கள் மட்டுமே. சுமார் எட்டு மணிக்கு எல்லாம் உறக்கம் வந்துவிட்டது. எல்லோருக்கும் பயணம் செய்த அசதி வேறு. நால்வருமே தூங்கிவிட்டோம். நடு ராத்திரி இருக்கும். என் உடல் அசை வதை உணர்ந்தேன். சின்ன உடலாக இருந் தாலும் அசைவது தெரியாது, நம்முடையது பெரிய உடல் வேறு. ஆமாம், என்னை யாரோ  எங்கோ இழுத்துக்கொண்டு சென்றதை உணர்ந்தேன். காட்டிற்கு வந்திருப்பதை என் முகநூலில் மட்டுமே எழுதி இருந்தேன்.

கடத்திக்கொண்டு என்ன கேட்கப் போகின்றார் கள் தெரியவில்லையே என யோசித்தேன். திரும்பவும் தூங்கிவிட்டேன். எப்படியும் இருட் டாகத்தான் இருந்தது. லேசான வெளிச்சம் வந்தபோது ஒரு குகைக்குள் இருப்பது தெரிந்தது. ஆஹா. குகையில் அடைச்சி வெச் சிருக்காங்க. ஆனால் கை, கால், வாய் எதை யும் கட்டவில்லை. சுற்றிப்பார்த்தேன். அப் போது தான் அங்கே ஒரு கூட்டம் உட்கார்ந்து கொண்டு இருப்பது தெரிந்தது. “ஓ.. ஓநாய்க் கூட்டமா?” என நினைத்துக் கொணடேன். “விழியன் சார், நாங்க ஓநாய்க் கூட்டம் இல்ல, நரிக்கூட்டம். நரிக்கும் ஓநாய்க்குமே வித்தியாசம் தெரியல உங்களுக்கு”ன்னு ஒரு  நரி முன்னாடி வந்து பேசுச்சு. என்னடா இது..

கதையில தான் நாம நரி, சிங்கம், யானை எல்லாம் பேசும்னு கதைவிடுவோம், என் கிட்டயே பேசுது, அதுவும் மைண்ட் வாய்ஸ் எல்லாம் இவங்களுக்கு கேட்குதேன்னு நெனச்சேன். “என்னைய ஏன் கடத்திட்டு வந்தீங்க நரி சார்?” “நான் சார் இல்ல, உங்க தகவலுக்கு மேடம்” “சரி, சொல்லுங்க நரி மேடம்” “உங்களால எங்களுக்கு ஒரு காரியம் ஆக வேண்டி இருக்கு” “என்னாலயா? நான் என்னங்க செய்ய முடியும்?” என்று கேட்டேன். “சரி, நரின்னு சொன்ன உடனே உங்களுக்கு என்ன நினைவுக்கு வருது?”

“காக்காகிட்ட வடையை ஏமாற்றின கதை, அப்புறம் நீல நிற நரிக்கதை, அப்புறம்  தந்திரக்கார நரிக்கதை, அப்புறம்..” “அப்புறம் எல்லா கதையிலையும் நாங்க தந்திரக்காரர்களாவே வருவோம். உண்மை யில் எங்களுக்கும் தந்திரத்திற்கும் சம்பந்தமே  இல்லை சார்” “என்ன நரி மேடம் சொல்றீங்க?” “ஆமாம், காலம் காலமா எங்க மீது உங்க ளைப் போன்ற கதை சொல்லிகளால் நாங்க  தந்திரக்காரர்களாக மாற்றப்பட்டு இருக்கோம். நாங்க வாழறது ரெண்டு மூனு வருஷம் தான். உலகம் முழுக்க வேறு வேறு வகையில இருக்கோம். நாய் வகை யறாவைச் சேர்ந்தவங்க நாங்க” “ஓஹோ நரி மேடம் என்  மூலமா உங்களைப் பற்றிய தகவல் கள் எல்லாம் சொல்றீங்களா?” “ஆமா. எங்களுக்கு வேற வழி தெரியல விழியன் சார்.  இருங்க எங்கயோ சத்தம் வருது.. என்னன்னு  கவனிங்க” என்று அந்த நரி சொன்னதும், எல்லோரும் காதைக் கூர்மையாக்கி கேட்டார்கள். ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு எலி ஆழமாக பள்ளம் நோண்டிக்கொண்டு இருக் கின்றதாம். நரிகளுக்கு அவ்வளவு காது கூர்மை போல. “ஆமாம். இரவு என்னை அலேக்காக தூக்கிட்டு வந்தீங்களா? இரவில் உங்களுக்கு  கண்கள் தெரியுமா?” இதற்கு நரி மேடம் பதில் சொல்லாமல் ஒரு குட்டி நரி முன்னே வந்து பதில் சொன்னது “ஆமாம்,

இரவில் தான் நாங்க வேட்டையாடச் செல்வோம். இப்பத்தான் நான் பயிற்சி எடுத்து கிட்டு இருக்கேன். எங்க கண்கள் இரவில் பார்க்க பிரத்யேகமா சில ஏற்பாடு எல்லாம் இருக்கு. நீங்க தூங்கிட்டு இருந்த இடம் செம கும் இருட்டா இருந்துச்சு. அது எங்களுக்கு ஒரு வகையில நல்லது தான். நாங்க பார்ப்போம், ஆனா உங்களால செயற்கைப் பொருள் இல்லாம பார்க்கவே முடியாது. அப்ப அப்ப மனிதர்கள் காட்டுக்குள்ள வருவாங்க. பகல்ல வந்துட்டு போனாக்கூட பரவாயில்லை. இரவில் அந்த டார்ச் லைட் எடுத்துகிட்டு வருவாங்க பாருங்க. அந்த வெளிச்சத்தைப் பார்த்தாலே எங்களுக்கு பயந்துக்கும். நாங்க வேற நல்ல விலங்கா, அதனால வேற திசையிலயோ குகைக்குள்ளயோ போயிடுவோம்” என்றது. எனக்குப் பசிப்பது போல இருந்தது. பல் விளக்கவில்லை. வயதான ஒரு நரி “நீங்க  தங்கின இடத்தில் இருந்து ரெண்டு பாட்டில் களை எடுத்து வந்திருக்கோம். ஒன்றில் தண்ணீரும் ஒன்றில் டீயும் இருக்குன்னு நினைக்கிறேன்.

நீங்க இப்ப டீ குடிச்சிக் கோங்க. உங்களுக்குத்தான் ரொம்ப பிடிக் குமே” என்றது. அட என நினைத்துக்கொண் டேன். பல் தேய்க்காமல் குடிக்க ஒரு மாதிரி யாக இருந்தது. “ஆமா, நீங்க எல்லாம் தினமும் ப்ரஷ் செய்றீங்களா?” என்றேன். எல்லா நரியும் ஈ என்று பல்லைக் காட்டியதும் கொஞ்சம் பயமாக இருந்தது. “எங்களுக்கு அதற்கான அவசியம் இல்லை விழியன் சார்” என்றது ஒரு நரி. “இப்ப என்னை என்ன செய்றதா இருக் கீங்க?” என்றேன் கொஞ்சம் பயத்துடன். “இன்னும் நீங்க எதுவும் சொல்லலையே சார்” - நரி மேடம் பேசத்துவங்கியது. “என்ன சொல்லணும்?” “எங்கள வெச்சு நல்லதா ஒரு கதை எழுதணும்” “அவ்ளோ தான? டீல்” “கதைத் தலைப்பு சொல்லுங்க” “சாப்பிச்சோ” “எதே.. என்னது அது?” “ஒரு நரியோட பேரு” “அய்யோ. நல்லதா ஒரு தலைப்பு வையுங்க” “காட்டைக் காப்பாற்றிய நரி” “க்கும்” “நரியின் அன்பு” ஒரு ஓரப்பார்வை வீசியது “கனிவான நரிக்கூட்டம்” எல்லோரும் அமைதியாக இருக்கவே சரிதான் போல எனத் தோன்றியது. “டக்குன்னு இப்படிக் கேட்டா எனக்கு யோசிக்க வராது. நானே நல்ல கதைய எழுதறேன் நரி தோழர்களே” என்றேன்.

“இப்ப என் மூன்று நண்பர்களும் காணவில்லைன்னு தேடிட்டு இருப்பாங்களே, அவங்களை எப்படிச் சமாளிப்பது?” என்று அவர்க ளிடமே கேட்டேன். “க்கும் அதெல்லாம் ஒன்னு மில்லை, அவங்க நீங்க காணவில்லைன்னே இன்னும் கண்டுபிடிக்கல. அவங்க அவங்க கேமரா எடுத்து படம் பிடிச்சிட்டு இருக்காங்க. அமைதியா போய் நின்னு பாருங்க அப்புறம் தெரியும்” என்றது அதே வயதான நரி. குகை யில் இருந்து வெளியே வந்தேன். நரிக்கூட்டத் தில் இருந்து ஒரு நரி முன்னே வந்து “இந்த அரியவகைப் பழங்களை உங்க பசங்களுக்கு கொடுங்க” என்றது. அந்தப் பழங்களை நான் பார்த்ததே இல்லை. பகல்  நேரம். இரண்டு குட்டி நரிகளில் முன்னே  வழி நடத்த, நான் பின்னாடியே சென்றேன்.  தூரத்தில் நான் தங்கிய மர வீட்டினைப் பார்த்தேன். திடீரென நரிகள் எதையும் காண வில்லை. சுற்றிப் பார்த்துக்கொண்டே நடந் தேன். மூவரும் என்னைப் பார்த்தார்கள் “என்ன விழியன்.. காட்டுக்குள்ள தனியாப்  போய் நிறைய கதைக் கருவைத் தேர்த்திட் டீங்களா” என்று சொல்லிச் சிரித்தார்கள். “அடப்பாவிங்களா”