tamilnadu

img

வாக்களிப்பது என்பது ஒரு தேசபக்த செயல்பாடாக, தேசப் பெருமிதத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதாகிவிட்டது - இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா,

வாக்களிப்பது என்பது ஒரு தேசபக்த செயல்பாடாக, தேசப் பெருமிதத்தில் ஒரு அடி எடுத்து வைப்பதாகிவிட்டது.  தேர்தல் அலுவலரின் கையில் வைத்திருக்கும் கத்தைக் காகிதத்தில் என் பெயரையும், புகைப்படத்தையும் பார்ப்பது ஒரு குடிமகனான என்னை உடனடியாக, அநேகமாக ஒரு மந்திரம் போல் இந்தியக் குடியரசுடன் பிணைக்கிறது.   ஒரு நிகழ்முறை என்பதை விட ஒரு கொள்கையாக அது மிகத் தூய்மையானதும், தேவையான வடிவமுமாகும்.  ஜனநாயகம் என்பது நமக்கு வாழ்க்கையால் கொடுக்கப்பட்ட நிலை, ஒரு அரசியல் முறையல்ல;  ஜனநாயகம் என்பது பார்த்து, உணர்ந்து, நுகர்ந்து, சிந்தித்து, தேர்வு செய்து செயல்படுவதற்கான சுதந்திரம்.  இவையெல்லாம் இயற்கையிடம் கோரிக்கை வைக்காமல் மனிதன்  அதனிடமிருந்து பெரும் பரிசுகள். 

;