tamilnadu

வாக்குப் பதிவு: பாதுகாப்பு பணிக்கு 1 லட்சம் காவலர்கள்

சென்னை, பிப்.17- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தி முடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் மாநில காவல்துறை மேற்கொண்டுள்ளது. காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உத்தரவின் பேரில் அனைத்து மாவட்டங் களிலும் தேவையான அளவுக்கு காவலர்கள் பாது காப்புக்காக தயார் நிலை யில் உள்ளனர். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கள், காவல் ஆணையர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உரிய அறிவுரைகளும் வழங் கப்பட்டுள்ளன. எக்கார ணத்தை கொண்டும் தேர்தல் நாளன்று அசம்பாவிதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு அதிகாரிகளிடம் தெரிவித் துள்ளார். இதனைத்தொடர்ந்து வாக்குப்பதிவு நடைபெறும் 19 ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் காவலர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 80 ஆயிரம் காவலர்கள், 12 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்டோர் தேர்தல் நாளன்று தீவிர  கண்காணிப்பில் ஈடுபடுத் தப்படுகிறார்கள். சென்னை யில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். தமிழக காவல்துறையின ருடன் தேர்தல் பாதுகாப்பு பணியில் முன்னாள் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதற்காக அனைத்து மாவட் டங்களிலும் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அந்த  வகையில் 3 ஆயிரம்  முன்னாள் ராணுவத்தினரை யும் பாதுகாப்பு பணியில்  ஈடுபடுத்த காவல்துறை  சார்பில் திட்டமிடப்பட்டுள் ளது.