tamilnadu

img

15 நிமிடம் வாகனங்கள் நிறுத்தம்

சென்னை, பிப். 28 - புதிய மோட்டார் வாகன சட்டப்படி அதீத அபராதம் விதிப்பதை கண்டித்து செவ்வாயன்று (பிப்.28) தமிழ்நாடு முழுவதும் 15 நிமிடம் வாகனங்களை நிறுத்தும் போராட்டம் நடைபெற்றது. ஆன்லைன் அபராத முறையை கைவிட வேண்டும், புதிய வாகனங்கள் வாங்க அரசு மானியம் வழங்குவதுடன், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் குறைந்த வட்டியில் கடன் வழங்க வேண்டும், ஆட்டோ டாக்சி கட்டணத்தை மறு  நிர்ணயம் செய்ய வேண்டும், கார்ப்பரேட்களுக்கு ஆதரவான  மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும்,  பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும், நலவாரிய குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனம் ஆகிய அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்திருந்தன. இதன்படி, தமிழ்நாடு  முழுவதும் இந்தப் போராட்டம் நடை பெற்றது.  சென்னை மற்றும் புறநகர் பகுதி களில் 25க்கும் மேற்பட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்றது.

அ.சவுந்தரராசன்

சென்னை ஸ்டெர்லிங் சாலை சிக்னல்  சந்திப்பில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன மாநில செயல் தலைவர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது செய்தி யாளர்களிடம் அ.சவுந்தரராசன் கூறி யதாவது: சர்வதேச சந்தையில் மிகக்குறை வான விலையில் கச்சா எண்ணெய் கிடைப்  பதால், ஒன்றிய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை குறைக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டி ஒரு வர் ஹெல்மட் அணியவில்லை என்றால், அந்த ஹெல்மட் விலையை விட அப ராத தொகை அதிகமாக உள்ளது. அப ராதம், சிறைதண்டனை போன்றவை பல  மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு மாத  வருமானத்தையே அபராதமாக வசூ லிக்கின்றனர்.

நிர்ப்பந்திப்பதா? 

ஆட்டோ, வேன், மீன்பாடி, குட்டி யானை போன்ற சிறு வாகன உடமையா ளர்களாக பல லட்சம் பேர் உள்ளனர். இவர்கள்தான் அதிக வேலைவாய்ப்பை வழங்கி வருகின்றனர். அந்த தொழிலை  அழிக்கும் வகையில் பெருமுதலாளிகள் நடத்தும் ஓலா, உபேர் போன்ற தனியார்  வாகனங்களை அரசு  ஊக்குவிக்கிறது. சாலையோரக் கடைகளில் பழுதுபார்க் கக் கூடாது. சர்வீஸ் சென்டரில் மட்டுமே  பழுதுபார்க்க வேண்டும் என்கின்றனர்.

ஆர்டிஓ அலுவலகம் தனியார்மயம்? 

வாகனங்களை எப்சி, ஆர்சி செய்வது, லைசென்ஸ் வழங்குவது உள்ளிட்டு ஆர்டிஓ அலுவலகத்தையே தனியாருக்கு  கொடுக்கப்போகிறார்கள். போகிற போக்  கில் நீதிமன்றத்தையும் தனியாருக்கு கொடுத்துவிடுவார்கள் போல் உள்ளது. ஆர்டிஓ அலுவலகம் தனியார்மயமானால் அனைத்துவகையான முறைகேடும் நடை பெறும். மாநில அரசின் உரிமையாக உள்ள சாலைப்போக்குவரத்தையும் ஒன்  றிய அரசு பறிக்கிறது. இதற்கு மாநில அரசு  தெரிவித்த எதிர்ப்பையும் மீறி சட்டம் கொண்டு  வரப்பட்டுள்ளது. மாநில அரசு அமல் படுத்தக் கூடாது. புதிய மோட்டார் வாக னச்சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். தனியார் வாகன பெருக்கத்தை கட்டுப்  படுத்தி, பொதுப்போக்குவரத்தை அதிகப்  படுத்தினால்தான் சுற்றுச்சூழல் மாசு பாட்டை தடுக்க முடியும். அதற்கேற்ப ஒன்  றிய அரசின் கொள்கை இல்லை. இதை ஆட்சியாளர்கள், மக்களுக்கு உணர்த்த இந்த போராட்டத்தை நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். ராயப்பேட்டை மணிக்கூண்டு சந்திப்  பில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செய லாளர் வி.குமார் தலைமையிலும் திரு விக நகர் ஓட்டேரி மேம்பாலம் அருகே தமிழ்நாடு சாலை போக்குவரத்து தொழி லாளர் சம்மேளனத் தலைவர் ஆறுமுக நயினார் தலைமையிலும் கொளத்தூர் அண்ணாசிலை அருகே சம்மேளன பொதுச்செயலாளர் வி.குப்புசாமி தலை மையிலும் சிஐடியு மாநிலச் செயலாளர்  கள் எஸ்.கே.மகேந்திரன்  மூலக்கடை யிலும், சி.திருவேட்டை அண்ணாநகர் ரவுண்டானா சிக்னலிலும், பா.பாலகிருஷ்  ணன் கிண்டி ஆலந்தூர் நீதிமன்றம் ரவுண்டானாவிலும் நடைபெற்ற போராட்  டங்களில் கலந்து கொண்டனர். கொளத்  தூரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைதுசெய்தனர்.