சென்னை, டிச. 31 - இது தொடர்பாக அமைப்பின் ஒருங்கிணைப் பாளர்கள் பேரா. அருணன், க. உதயகுமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் அண்மை யில் நடைபெற்ற கூட்டத்தில் சில இந்து தீவிரவாத சாமியார்கள் பேசியுள்ள கருத்துக்கள் இந்நாட்டின் மதநல்லிணக்கத்தை சீர் குலைத்து, மக்கள் ஒற்று மையை பிளவுபடுத்தும் வி தமாக உள்ளது. ஹரித்துவாரி லும், புதுதில்லியிலும் சிறு பான்மையினருக்கு எதிராக, கொலைவெறி தாக்குதல், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியுள்ளனர். இந்தியாவில் பிற மதத் தினருக்கு எதிராக வன்முறை களை உருவாக்கி “இந்து ராஷ்டிரா” என்ற கனவை நிறைவேற்றும் நோக்கம் கொண்டவையாகும்.
ஒரு சாமியார், 10 முஸ்லிம்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பொய் வழக்கு போட செய்துள்ளதாக பேசி உள்ளார். ஹரித்துவாரில் இந்து மத நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகள் அனு மதிக்கக் கூடாது, கிறிஸ்து மஸ் நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது என்றும் பேசியுள் ளார். இந்த பேச்சுகள் மத நல்லிணக்கத்தை வெளிப் படையான முறையில் சீர் குலைக்க கூடியவை. எனவே, உத்தரகாண்ட் அரசாங்கம் இந்த சாமியார்கள் மீது உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை உத்தர காண்ட் அரசு செய்ய தவறி னால் தேச ஒற்றுமை, மத நல்லிணக்கத்தை காக்கும் கடமை ஒன்றிய அரசுக்கு உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களிலும் சிறு பான்மை மக்களுக்கு எதி ரான சங்பரிவாரக் கும்பலின் அச்சுறுத்தல்கள், வன்முறை வெறியாட்டங்கள் அதி கரித்து வருகின்றன.
உத்தர கண்ட் மாநிலத்தில் கிறிஸ் துவ மடாலயள், டெல்லி யில் தேவாலயம், மத்திய பிர தேசம் விதிஷா மாவட்டத் தில் கத்தோலிக்க கல்வி நிலையத்தின் மீது தாக்கு தல், கர்நாடக மாநிலம் கோலாரில் கிறிஸ்துவ மத புத்தகங்களை எரித்து நடை பெற்ற கலவரம், சண்டிகார், அம்பாலாவில் இயேசு சிலை உடைப்பு, கிறிஸ்து மஸ் பண்டிகையை ஒட்டி உத்தரப் பிரதேசம், ஹரி யானா, அசாம் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் அனைத்தும் மதநல்லிணக் கத்தையும், மக்களின் ஒற்றுமையையும் மிக மோசமாக பாதிக்கக்கூடிய சம்பவங்களாகும். எனவே, ஒன்றிய பாஜக அரசு, தனது கட்சி ஆளும் மாநிலங்களில் இத்தகைய தொடர் கொலை மற்றும் வன்முறை சம்பவங்களை தடுத்து நிறுத்த உடனடி யாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மத சுதந்திரத் திற்கான உரிமை என்ற வகையில் ஒரு சட்டத்தை கர்நாடகா அரசு இயற்றி உள்ளது. இந்தச் சட்டம் மதமாற்றம் செய்பவர்க ளுக்கு மூன்று ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் 50 ஆயிரம் ரூபாய் வரை அபரா தமும் விதிக்க வகை செய்கி றது. மதமாற்றம் செய்து கொண்டவரின், வேண்டாத உறவினர் புகார் அளித்தால் கூட இந்த சட்டத்தை அமல்படுத்தி மிக கடுமை யான தண்டனையை அளிக்க முடியும். இந்த சட்டத்தில் குறிப்பிட்டுள்ள பல அம்சங் கள் நீதிநெறி முறைக்கு விரோ தமாக உள்ளது. இது மிகக் கொடூரமான ஒரு சட்டம். கர்நாடக மாநில அரசு இந்த சட்டத்தை உடனடியாக திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அந்த அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.