விழுப்புரம்,பிப்.15- விழுப்புரம் அருகே குண்டலபுலியூர் காப்ப கத்தில் நடந்துள்ள அத்து மீறல் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பிப்.27 அன்று மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கும் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. குண்டலப்புலியூர்அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் நடந்து ள்ள அத்துமீறல் தற்போது அம்பலமாகியுள்ளது. இந்த நிலையில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பி னர் டி. ரவிந்திரன் தலைமை யில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராம மூர்த்தி, மாவட்டச் செய லாளர் என்.சுப்பிரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் பி.குமார். ஜி.ராஜேந் திரன். ஏ.சங்கரன், ஆர்.டி. முருகன்,விக்கிரவாண்டி ஒன்றிய செயலாளர் கிருஷ் ணராஜ், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.நாக ராஜன், கே.வீரமணி ஆகி யோர் மாவட்ட ஆட்சியர் பழனியை சந்தித்து கோரிக்கை மனுகொடுத்த னர். அந்த மனுவில், அன்பு ஜோதி ஆஸ்ரமத்தில் நடந்து ள்ள அத்துமீறல்கள் குறித்து முழுமையான விசார ணை நடத்த வேண்டும். காணாமல் போன வர்கள் குறித்தும் விசாரிக்க வேண்டும். அனுமதியில்லா மல் எப்படி இத்தனை, ஆண்டுகாலமாக இந்த காப்பகத்தை நடத்தி வந்தார்கள்? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர். பின்னர் செய்தியாளர் களை சந்தித்த மாவட்ட செயலாளர் சுப்பிரமணி யன், “அன்பு ஜோதி காப்பகத்தின் முறைகேடு கள் குறித்து வருகிற 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். இதில் கட்சி யின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்கி றார்”என்றார்.