tamilnadu

img

காலமுறை ஊதியம் வழங்க ஊர்ப்புற நூலகர்கள் கோரிக்கை

சென்னை, அக். 7 - ஊர்ப்புற நூலகர்களுக்கு கால முறை ஊதியம் வழங்கக் கோரி வெள்ளி யன்று (அக்.7) சென்னை டிபிஐ வளாகத்தில் நூலகத்துறை அலுவ லர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வட்டார, பேரூராட்சி பகுதி நூல கங்கள் தரம் உயர்த்த வேண்டும், தொழில்நுட்பப் பணியாளர்களுக்கு இணையான ஊதியத்தை நூலகர்க ளுக்கு வழங்க வேண்டும், பொது நூலக  இயக்குநர் பணியிடத்தை பதவி  உயர்வு வழியாக நிரப்ப வேண்டும், பணிமூப்பு பட்டியலில் உள்ள குறை பாடுகளை களைய வேண்டும் என்பன  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு பொது நூலகத்துறை அலுவலர் சங்கத்தின்  தலைவர் பெ.பிரபாகரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத் தின் மாநிலத் தலைவர் மு.அன்பரசு, வடசென்னை மாவட்டச் செயலாளர் ம.அந்தோணிசாமி, தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொருளாளர் நா.வினோத்குமார், சங்கத்தின் பொதுச் செயலாளர் த.இளங்கோ, பொரு ளாளர் கு.ராஜகுரு உள்ளிட்டோர் பேசினர்.