கோயம்புத்தூர், ஜூலை 15 - தமிழ்நாடு கிராம சுகா தார செவிலியர் சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட் டம், கோவையில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்ட டத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங் கத்தின் மாநிலத் தலைவர் சி. பரமேஸ்வரி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட இணைச் செயலாளர் ஆர். மால திராணி வரவேற்றார். மாவட்டச் செயலாளர் எஸ். ஜெகநாதன் துவக்க உரை யாற்றினார். மாநிலப் பொதுச் செயலாளர் பி. ராணி மற்றும் மாநிலப் பொருளாளர் பி. ஜெயலட்சுமி ஆகியோர் அறிக்கை முன்வைத்தனர். சுகாதாரத் துறையில் ‘சம வேலைக்கு சம ஊதி யம்’ என்கிற அடிப்படை யில், பயிற்சி முடித்த கிராம சுகாதார செவிலியர்களுக் கும் கிரேடு வழங்க வேண்டும். காலிப் பணி யிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்; கிராம சுகாதார செவிலியர்கள் மேற் கொள்ளும் தாய்- சேய் நலப் பணியின் பிரதான பணி யான 3-0 கணினிப் பணியை முற்றிலும் எளிமைப்படுத்த வேண்டும்; சுகாதாரத் துறை யில் கட்டாயப் பணியிட மாறுதல் கொள்கையை கைவிட்டு நடைமுறையில் உள்ள பணியிட மாறுதலை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலத் தலைவராக டி. புனிதா, மாநில பொதுச் செயலாளராக பிரகலதா, அமைப்புச் செயலாளராக பரமேஸ்வரி, மாநிலப் பொரு ளாளராக விஜயாராணி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி, மாநிலத் துணைத்தலைவர் இராணி சிறப்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வி. சாந்தி நன்றி கூறினார்.