தஞ்சாவூர், ஜூன் 4 - தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப் பள்ளி அருகிலுள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் 24 வயது இளம்பெண் ஏஞ்சலின் ரெனிட்டா. இவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் நடத்திய குடிமைப்பணி தேர்வு முடிவுகளில், அகில இந்திய அளவில் 338-ஆவது இடத்தை பிடித்து, சாதனை படைத்திருக்கிறார். தமிழ கத்தில் வெற்றி பெற்ற 27 பேரில் இவரும் ஒருவர். இவர் குடிமைப் பணித் தேர்வை, தமிழ் வழியில் எழுதி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட குடிமைப்பணி அலுவலர்களைத் தேர்வு செய்வதற்கான முதல்நிலை, முதன்மைத் தேர்வுகள் ஏற்கெனவே நடத்தப்பட்ட நிலையில், ஏப்ரல், மே மாதங்களில் ஆளுமைத்திறன் தேர்வு நடத்தப்பட்டது. இதையடுத்து நிறை வாக தேர்வு செய்யப்பட்ட விவரங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வா ணையம் அண்மையில் வெளியிட்டது.
இதில், அகில இந்திய அளவில் 338-ஆவது இடத்தை தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அரு கிலுள்ள மைக்கேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏஞ்சலின் ரெனிட்டா பெற்றார். ரவி-விக்டோரியா தம்பதியின் மகளான இவர், குடிமைப்பணித் தேர்வில் சிறப்பிடம் பெற்றதை தொடர்ந்து, மைக்கேல்பட்டி கிராமமே மகிழ்ச்சியில் ஆழ்ந்தது. கிராமத்தினர், உறவினர்கள் திரண்டு வந்து ரெனிட்டாவுக்கு இனிப்பு வழங்கியும், சால்வை அணிவித்தும் வாழ்த்துகளைத் தெரிவித்து வரு கின்றனர். ரெனிட்டா 1 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் தமிழ் வழியில் கல்வி பயின்றார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்களும், பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200க்கு 1158 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். தொடர்ந்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் வேளாண் மற்றும் நீர்ப்பாசனம் பொறி யியல் படித்த அவர் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். இந்நிலையில் குடிமைப்பணித் தேர்வையும் தமிழில் எழுதி வெற்றி பெற்றிருக்கிறார்.
சிறு வயதில் வேளாங்கண்ணிக்கு குடும்பத்தினருடன் ஏஞ்சலின் ரெனிட்டா சென்ற போது சுனாமி பாதிப்பை நேரில் பார்த்து மனவேதனை அடைந்துள்ளார். அது முதல் பாதிக்கப் பட்ட மக்கள் படும் சிரமங்களைப் பார்த்து, அரசுப் பணியில் இருந்தால் தான் மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற எண்ணம் உதித்தது. அதுவே தன்னை குடிமைப் பணித் தேர்வுக்குப் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டு கோலாக இருந்தது. பெண்கள் வீட்டில் முடங்கியிருக்கக் கூடாது. வெளியுலகுக்கு வந்து பணி செய்ய வேண்டும்” என்றார் ரெனிட்டா. கிராமப்புற பள்ளியில் படித்த ரெனிட்டா, தான் பிறந்த மைக்கேல் பட்டி கிராமத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். பள்ளிக்குச் செல்லாத தந்தை, ஆரம்பக் கல்வியை முடிக்காத தாய் என்ற நிலையைக் கொண்ட சாதாரணக் குடும்பத்தில் பிறந்து, குடிமைப்பணித் தேர்வில் தமிழ்வழிக் கல்வியில் தேர்வெழுதி சாதித்து மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றால் மிகையாகாது.