தோழர் ஜோதிபாசு நகர் (கொல்கத்தா),பிப்.16- வறுமையால் ஏற்படும் தண்டனையை மக்கள் மீது சுமத்தும் மோடி அரசை வீழ்த்து வோம் என்று அகில இந்திய விவசாயத்தொழி லாளர்கள் சங்கத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாட்டில் ஏ.விஜயராகவன் முழக்கமிட்டார். அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் 10 ஆவது அகில இந்திய மாநாடு கொல்கத்தாவில் தோழர் ஜோதிபாசு நகர், குமார் சிரால்கர் அரங்கில் பிப்ரவரி 15 புதனன்று எழுச்சியுடன் துவங்கியது. மாநாட்டை துவக்கி வைத்து சங்கத்தின் தலைவர் ஏ.விஜயராகவன் உரையாற்றினார். அவர் பேசியதாவது: அகில இந்திய மாநாடு நடைபெறும் மேற்கு வங்காளமும், ஹவுரா நகரமும் காலனிய ஆதி க்கத்தை எதிர்த்து விடுதலை போரில் வீரச்சமர் புரிந்த மண். இங்கு தான் தெபாகா விவசாயி களின் போராட்டம் உள்ளிட்ட நிலத்துக்கான போராட்டம் ஏராளமாக நடந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் மாநாடு நடைபெறுகிறது.
இந்துத்துவா சக்திகளும், ஆர்எஸ்எஸ், திரிணாமுல் குண்டர்களும் முற்போக்கு, இடது சாரி, ஜனநாயக சக்திகள் மீது நித்தமும் கொலை வெறி தாக்குதல் நடத்தி வரும் பின்ன ணியில் தான் நமது 10 ஆவது மாநாடு நடை பெற்று வருகிறது. கொரோனா காலத்தில் உலகம் முழுவதும் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களிடமும் உணவு, மருத்துவம் உள்ளிட்ட சமூக பாதுகாப்பையும் பெரும் வியாபார மாக்கி கொள்ளையடித்தனர். சீனா ,வியட்நாம், வடகொரியா, கியூபா போன்ற சோசலிச நாடுகள் சுகாதாரத்தை முற்றி லும் இலவசமாக கொடுத்தனர். ஆப்பிரிக்கா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கியூபா இலவசமாக தடுப்பூசியை வழங்கியது. இந்தியாவில் மோடி அரசாங்கம் தடுப்பூசி தர மறுத்தது.உணவு, சுகாதாரம் கிடைக்காமல் நாடு முழுவதும் மக்கள் அவதிப்பட்டார்கள்.
ஊரடங்கு காரணமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து பட்டினிச் சாவுகள் தொடர்ந்தன. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் போர்க் காலங்களில் கூட ஏழை மக்களிடம் கொள்ளையடித்தன. வேலையின்மை வறுமையை போக்க எந்த திட்டத்தையும் கையாளவில்லை. இந்தியா விலும் இதே நடவடிக்கைகளில்தான் மோடி அரசாங்கம் ஈடுபட்டது. ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வந்து வலுவாக நடத்திய போராட்டத்தால்தான் தடுப்பூசி உள்ளி ட்ட சில உரிமைகளைப் பெற முடிந்தது. கேரள இடது ஜனநாயக முன்னணி அர சாங்கம் அதனுடைய மாற்று அணுகுமுறை காரணமாக உணவு, மருத்துவம், கிராமப்புற வேலை வாய்ப்பு உள்ளிட்டவைகளை சிறந்த முறையில் அமலாக்கி ஏழை எளிய மக்களை பாதுகாத்து வருகிறது. உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியும் ஏற்றத்தாழ்வும் நீடித்து வருவதை தடுக்க முதலாளித்துவ நாடுகள் எதுவும் செய்யவில்லை.
காவு வாங்கும் மோடி அரசு
இந்தியாவில் ரயில்வே, எல்ஐசி, விமானம் உள்ளிட்ட அனைத்துத்துறைகளையும் கார்ப்பரேட்களுக்கு மோடி அரசு விற்று வருகிறது. ராணுவத் தளவாடங்களைக் கூட தனியார் கம்பெனிகளிடம் வாங்குகிறது. இதனால் வேலையின்மை அதிகரித்து வரு கிறது. தொழிலாளர்கள் உரிமைகளும் சமூகப் பாதுகாப்பு திட்டங்களும் மோடி அரசால் காவு வாங்கப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கான நிதியை குறைத்துள்ளது. ஏற்கனவே தர வேண்டிய ஊதியத்தை கொடுத்தால் மோடி அரசு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்துள்ள நிதியால் வெறும் 20 நாட்களுக்கு மட்டுமே வேலை கொடுக்க முடியும். குறைந்தபட்சக் கூலியைக் கூட நாடு முழுவதும் தருவதற்கு மோடி அரசு தயாராக இல்லை. உணவுக்கான மானியத்தை பாதியாக குறைத்துள்ளது மோடி அரசு. பட்டி யல், பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்படும் நிதிகளையும் குறைத்து அதானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வரிச் சலுகையாக மோடி அரசு கொடுத்து வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பெற்ற கடன்களை ரத்து செய்து மோடி அரசு ஏழை களுக்கு அநீதி இழைத்து வருகிறது.
கேரளாவில் பினராயி விஜயன் அரசு மாற்று கொள்கையுடன் சமூக நலத் திட்டங்களை அமல்படுத்தி உலகமே வியந்து பாராட்டும் அளவில் உணவு, சுகாதாரம், கல்வி, அடிப்படை வசதிகளுடன் கான்கிரீட் வீடுகள், சட்டப்படியான ஓய்வூதியம், பொது விநியோக முறையை பலப்படுத்தி அனைத்து அத்தியாவசிய பொருட்களும் விநியோகம் செய்தது உள்ளிட்ட சமூக பாதுகாப்பை கேரள அரசு உறுதிப்படுத்தி வருகிறது. மக்கள் பிரச்சனைகளை மறைப்பதற்கு நாடு முழுவதும் இந்துத்துவாவின் செயல்திட்ட மான வகுப்புவாத பயங்கரவாத நடவடிக்கை களை ஆர்எஸ்எஸ் -பாஜக குண்டர்கள் செயல்படுத்தி வருகின்றனர். இதன் மூலம் நாடு முழுவதும் மக்கள் ஒற்றுமை சீர்குலைக்கப் பட்டு மதக்கலவரங்கள் நடத்தப்படுகிறது. விடுதலைப் போரில் வகுப்புவாத சக்தி களுக்கு எதிராக எதிர்ப்பு இயக்கம் நடத்திய நாடு இந்தியா. இப்போது இந்துத்துவா சக்திகள் நாட்டின் ஒற்றுமையை நிர்மூல மாக்க முயற்சிக்கின்றன. அரசு நிர்வாகம், ராணுவம், நீதித்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை ஆர்எஸ்எஸ் -பாஜக ஒன்றிய அரசு ஆக்கிரமிப்பு செய்து நாடு முழுவதும் மதவெறி ஆட்சியை பரவலாக்க அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இத்தகைய மோசமான மதவெறி கொள்கையை கடைப்பிடிக்கும் பாஜக அரசு அகற்றப்பட நாடு முழுவதும் முற்போக்கு ஜன நாயக இடதுசாரிகள் உள்ளிட்ட வர்க்க வெகுஜன மக்களின் கிளர்ச்சி போராட்டங் களை அதிகப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக அகில இந்திய தலை வர் ஏ.விஜயராகவன், அமியாபத்ரா, ஓ.எஸ். அம்பிகா, ஏ.லாசர், வி.வெங்கடேஸ்வரலு, பூப்சந்த்சனா பிரிஜிலால் பார்தி ஆகியோர் கொண்ட தலைமைக்குழுவை மாநாடு ஒருமன தாக தேர்வு செய்தது. மாநாட்டில் சங்கத்தின் தமிழ்நாடு மாநில தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ, மாநில பொதுச் செயலாளர் வீ. அமிர்த லிங்கம், மாநில பொருளாளர் அ.பழநிசாமி, மத்திய நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், மாநில துணைத் தலைவர் பி.வசந்தா மணி உள்பட 59 பேர் பிரதிநிதிகளாக பங்கேற்றுள்ளனர்.