அடர்த்தியான பனி காணப்படும் பகுதிகளில் ஓட்டுநர்களின் பார்வையை மறைக்கும் வகையில் வாகனத்தின் கண்ணாடியில் படியும் பனியை விரைந்து உருக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக சர்வோ டிஃப்ராஸ்ட் என்ற திரவத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, வாகனத்தின் கண்ணாடிகளை சுத்தமாக வைத்திருக்கவும் பயன்படும் இந்த திரவம் 500 மில்லி பேக்குகளில் தெளிக்கும் வசதியுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைவர் எஸ்.எம். வைத்யா அறிமுகம் செய்தார். நிறுவனத்தின் சந்தையிடல் பிரிவு இயக்குநர் வி.சதிஷ்குமார் உடனிருந்தார்,