பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த முக்தார் அப்பாஸ் நக்வி (பாஜக) மற்றும் மத்திய உருக்குத்துறை அமைச்சர் ஆர்.சி.பி. சிங் (ஐக்கிய ஜனதாதளம்)ஆகி யோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இவர்கள் இரு வரின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை 7-ஆம் தேதி யுடன் முடிவடையும் நிலையில், அவர்கள் மீண்டும் எம்.பி.யாக தேர்ந்தெ டுக்கப்படாததால், தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். நாடாளுமன்றத்தில் பாஜகவின் ஒரே முஸ்லிம் எம்.பி.யாக நக்வி இருந்து வந்த நிலையில், தற்போது அதுவும் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நக்விக்கு குடியரசுத் துணைத் தலைவர் பதவி வழங்கப்பட லாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.