tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

பெண்களின் பாதுகாப்புக்கு க்யூஆர் குறியீடு

சென்னை : பொதுமக்கள், குறிப்பாக பெண்களின் பாது காப்பான பயணத்தை உறுதி செய்திட ஆட்டோ மற்றும் வாடகைக்கார்களுக்கு சென்னை பெருநகர காவல்துறை சார்பில் காவல் உதவிக்கான ‘க்யூ  ஆர் குறியீடு’களை முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (மார்ச் 7) தொடங்கி வைத்தார்.

தயாநிதி மாறன் வெற்றி செல்லும்

சென்னை: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு தயாநிதி மாறன் வெற்றி பெற்றார். இந்த வெற்றியை எதிர்த்தது அந்த தொகுதியில் போட்டி யிட்ட வேட்பாளர் ரவி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், தயாநிதி மாறன் வெற்றி செல்லும் என்று உத்தரவிட்டுள்ளார்.

அரசுக்கு ரூ. 5 லட்சம் அபராதம்

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள அரசு உதவி பெறும் கல்லூரியில் தூய்மைப் பணியாளர் நியமனம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்துள் ளது. இந்த அபராதத்தை தூய்மைப் பணியாளராக நியமிக்கப்பட்டவருக்கு ரூ. 2.50 லட்சம், சட்டப்பணி ஆணை குழுவுக்கு ரூ. 2.50  லட்சம் என பிரித்துக் கொடுக்க வும் ஆணை பிறப்பித்தது.

மேலும் ஒரு நிர்வாகி விலகல்

சென்னை: “சங்பரிவார் அமைப்புகளோடு கை கோர்த்துக்கொண்டு, அவர்களின் சூழ்ச்சிக்கு தமி ழர்களை இறையாக்கிப் பிள வுபடுத்தும் உங்களோடு (சீமான்), என்னால் பயணம் செய்ய முடியாத காரணத் தால், மிகுந்த மனவேதனை யுடன், நான் வகித்து வந்த மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினரி லிருந்தும் விலகுகிறேன்” என்று நாம் தமிழர் கட்சி யில் 16 ஆண்டுகளாக பய ணித்து வந்த மாநில இளை ஞர் பாசறை ஒருங்கி ணைப்பாளர் வழக்கறிஞர் ஞானசேகரன் தெரி வித்திருக்கிறார்.  

கால்நடை மருத்துவ பணியிடங்கள்

சென்னை: வன விலங்கு களுக்கு சீரிய பாதுகாப்பு மற்றும் மருத்துவச் சேவை களை வழங்கும் வகையில் தமிழக வனத்துறையில் புதிதாக 23 கால்நடை மருத்துவப் பணியிடங்களை உருவாக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஒப்புதல் வழங்கியுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி: எடப்பாடி பழனிசாமி,  அண்ணாமலை நாடகம்

யாருடன் கூட்டணி என்று 6 மாதம் கழித்துக் கேளுங்கள் என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்; பாஜகவை நோட்டா கட்சி என்றவர்கள் பாஜகவுடன் கூட்டணிக்காக தவம் இருக்கிறார்கள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் கூறியுள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஆத்தூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பாஜக உடனான கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து 6 மாதம் கழித்துக் கேளுங்கள் என்றார். கோயம்புத்தூரில் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த அண்ணாமலை, “பாஜகவுடன் கூட்டணியா? என்ற கேள்விக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எந்த மறுப்பும் தெரிவிக்காதது குறித்து கேட்கிறீர்கள். அவசரத்தில் பேசும் சப்ஜெக்ட் அல்ல இது. பொறுமையாகப் பேசுகிறேன். இன்னும் இரண்டு நாட்களில் மீண்டும் அமித்ஷா தமிழகம் வருகிறார். அதன் பின்னர் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும்” என்றார்.  இந்நிலையில் கோயம்புத்தூரில் வெள்ளிக்கிழமை மீண்டும் பேட்டி அளித்துள்ள அண்ணாமலை, “பாஜக தீண்டத்தகாத கட்சி, பாஜக நோட்டா கட்சி, பாஜக-வால் தான் தேர்தலில் தோற்றோம் எனக் கூறியவர்கள். இன்றைக்கு பாஜக-விற்காக தவம் இருக்கிறார்கள்” என்று கூறியுள்ளார். எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலையின் இந்த பேட்டிகள், மக்களை ஏமாற்றுவதற்காக போடப்படும் நாடகம் என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன.