tamilnadu

img

வானிலை அறிக்கையிலும் இந்தி திணிப்பு - ஒன்றிய அரசுக்கு சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்

மதுரை,மார்ச்.27- தமிழ்நாட்டிற்கான வானிலை அறிவிப்பில் இந்தி மொழி சேர்க்கப்பட்டதற்கு சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது;
தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை வழங்கும் சென்னை மண்டல வானிலை மையம் தனது அன்றாட வானிலை அறிக்கையை இந்தியிலும் வழங்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டின் பேரிடர் பாதிப்பு நிவாரணத்துக்கு நிதியுதவி அளிக்காத ஒன்றிய அரசு பேரிடர் முன்னறிவிப்பில் இந்தியைத் திணிக்கிறது.
பா.ஜ.க.விற்கு தமிழ்நாட்டு மக்களின் நலன் என்றுமே முக்கியமானதாக இருந்ததில்லை என்பதற்கு இந்நடவடிக்கை மற்றுமொரு உதாரணமாகும். என சு.வெங்கடேசன் எம்.பி கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளார்