tamilnadu

img

எந்த மொழியையும் திணிக்கக் கூடாது

சென்னை, மே 29- எந்த மொழியையும் யார்மீதும் திணிக்கக் கூடாது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதல மைச்சர் கருணாநிதியின் சிலையை சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் திறந்து வைத்த பிறகு, கலை வாணர் அரங்கில்நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் துணை தலைவர்வெங்கய்யா நாயுடு பேசுகையில், நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் ஒருவர் கலைஞர் கருணாநிதி. ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழை த்தவர் கருணாநிதி.  இந்தியாவின் பெருமை மிக்க முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர்.  என் இளம் வயதில் கலைஞரின் உரையால் ஈர்க்கப்பட்டு இருக்கி றேன். கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். கலைஞர் கைது செய்யப்பட்ட போது ஜனநாயகத் திற்காக வாதாடினேன். கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப் பதில் கலைஞர் தனித்திறன் கொண்ட வர். பன்முகத்தன்மை அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர். அரசியல் பதவி முள் கிரீடம் என்று கூறியவர். 

தமிழ் சினிமாவின் புதிய அத்தி யாத்தை எழுதியவர் கருணாநிதி. ‘சொல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது’ என்ற குறள் கலைஞ ருக்கு பொருந்தும். தமிழையும் தமிழ் பண்பாட்டையும் வளர்த்தவர் கரு ணாநிதி. மாற்றுக் கருத்துகள் இருந் தாலும், கருணாநிதியின் செயல்பாடு களை வியப்போடு பார்த்துள்ளேன். மக்களின் நலன்களுக்காகவே வாழ்ந்தவர் கருணாநிதி. அவர் ஒரு சக்தி வாய்ந்த தலைவர். அரசி யலில் இருந்தபோது கருணாநிதி யுடன் நீண்ட காலம் பயணித் துள்ளேன். அவருடன் கருத்து வேறு பாடுகள் இருந்திருக்கிறது. அரசி யல்வாதிகள் ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும்.  எந்தக்கட்சியைச் சார்ந்த வராக இருந்தாலும், அவர்கள் மக்க ளுக்காக உழைப்பதால்அவர்களை ஒருவர் மதிக்க வேண்டும். எதிரிகள் போல் செயல்படக்கூடாது. ஜனநாய கத்தையும், சட்டத்தையும் அனை வரும் மதிக்க வேண்டும். வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம், சமூக நீதிக் காக போராடியவர் கருணாநிதி. சமூக ஆர்வலர், அரசியல் சீர்திருத்த வாதி, நிர்வாகி, கவிஞர், திரைக்கதை வசனகர்த்தா என்று பன்முகத்தன்மை கொண்டவர் கருணாநிதி என்று புக ழாரம் சூட்டினார்..

தாய், தாய்மொழி, தாய்நாடு ஆகியவற்றுக்கு நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். வீட்டில் தாய் மொழியை பேசுங்கள். நான் கலை ஞரை மிகவும் மதிப்பதற்கு முக்கிய காரணம், தாய்மொழியை அவர் ஊக்குவித்ததுதான். பிற மொழி களை கற்பதிலோ, பேசுவதிலோ தவறில்லை. ஆனால் தாய்மொழிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அந்த வகையில் தமிழுக்காகவே போராடி மறைந்தவர் கருணாநிதி. தாய்மொழி கண் போன்றது. எங்கு  சென்றாலும் தாய்மொழியை மறக்கக் கூடாது. எந்த மொழியையும் திணிக்கக் கூடாது. எந்த மொழியையும் எதிர்க்க வும் கூடாது. தமிழ் மக்கள் தங்கள் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகை யில் உடை அணிய வேண்டும். பிற மொழிகளை எதிர்க்க வேண்டாம். நம் மொழியை ஆதரிப்போம்.  ஒற்று மையே நம் வலிமை. அனைவரும் ஒற்றுமையுடன் பயணித்தால் தான் எதையுமே சாதிக்க முடியும் என்றார். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி, மாநிலங்கள் வளர்ச்சி அடை ந்தால் நாடும் வளர்ச்சி அடையும் என அவர் கூறினார்.

மு.க.ஸ்டாலின்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், 2001ஆம் ஆண்டு அப்போதைய ஆட்சியாளர்களால் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது, கே.ஆர்.நாராயணன், வாஜ்பாய் ஆகியோர் துடிதுடித்துப் போயினர். அப்போது அவரின் கைதுக்கு காரணமானவர்களை கடு மையாக விமர்சித்தவர் தான் இன்றைய குடியரசுத் துணைத் தலை வர். குடியரசுத் துணைத் தலைவர் மிகச் சிறந்த ‘நாடாளுமன்ற ஜனநாய கவாதி’ என்று பெயர் எடுத்தவர். மாநிலங்களவையை கொந்த ளிப்பான சூழலிலும் திறம்படக் கையா ண்டவர். கருணாநிதியின் சிலையை அவர் திறப்பது மிக, மிக சாலப் பொருத்தமாக அமைந்திருக்கிறது என்று கூறினார். மேலும், “இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களையும், நிலை யான ஆட்சியையும் உருவாக்க துணை நின்றவர் கருணாநிதி. அவர் பன்முகத்தன்மை கொண்டவர்.  இன்றைக்கு நாம் காணக்கூடிய நவீனத் தமிழ்நாடு கருணாநிதியால் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதற்கான தொலைநோக்குப் பார்வை அவருக்கு இருந்தது. அதற் கான உள்ளார்ந்த அக்கறை அவ ருக்கு இருந்தது. ஏனென்றால், தமிழ்நாட்டில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடியலாக அவர் விளங்கி னார். அத்தகைய மக்களின் உயர்வுக் காக எழுதினார். அவர்களுக்காகப் பேசினார். அவர்களுக்காகப் போராட்டம் நடத்தினார். ஆட்சி அதி காரம் கிடைத்ததும், அவர்க ளுக்கான திட்டங்களைத் தீட்டினார் என்று முதலமைச்சர் கூறினார்.

நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகன் வரவேற்றார். தலைமைச் செயலர் வெ.இறையன்பு நன்றி கூறி னார். நிகழ்ச்சியில், சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி தேசியச் செயலர் டி.ராஜா,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்த ரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் தலைவர் தொல்.திருமாவ ளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன்,  முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்துகொண்டனர்.