tamilnadu

img

சுற்றுலா பயணிகளை கவரும் வீராணம் ஏரியின் ‘ஒற்றன் பாதை’!

வரலாற்று கதைகளில் பொன்னின் செல்வன் தமிழகம் மட்டு மல்லாமல் நாட்டிலுள்ள அனை வரையும் ஈர்த்துள்ளது. இந்த கதையை திரைப்படமாக எடுக்க வேண்டும் என கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு முயற்சிகள் செய்து தோல்வியில் முடிந்தது. இந்நிலையில், இயக்குநர் மணி ரத்னம் இயக்கத்தில் திரைப்பட மாக்கப்பட்டு முதல் பாகம் வெளி யாகியுள்ளது. இது தமிழகம் முழுவதும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரம் சோழர்கால ஆட்சியில் முக்கிய இடமாக  விளங்கிய வீர நாரயணன் ஏரி, காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள கடம்பூர், பழையறை, கங்கைகொண்ட சோழபுரம், சுவாமி மலை, தஞ்சை அரண்மனை உள்ளிட்ட பகுதியை திரைப்படத்தில் சிறிதளவு கூட காட்டாமல் வேறு ஏதோ இடங்களை காட்டி பெயரை மட்டும் சுட்டிகாட்டி படமாக்கப்பட்டுள்ளது என வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் பல்வேறு தரப்பு மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஒற்றனாக வந்திய தேவன் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள  வீரநாராயணன் ஏரி கரையில் குதிரையில் வருவதையும், காட்டுமன்னார் கோவில் அருகே ஆதித்திய கரிகாலன் இருந்த கடம்பூர் அரண்மனை, கும்ப கோணம் சுவாமிமலை, பழையறை, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை அரண்மைனை உள்ளிட்ட பல்வேறு இடங்களின் வரலாறுகளை அறிந்து அந்த இடங்களை சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆந்திராவில் இருந்து 30க்கும் மேற்பட்ட புகைப்படக் கலைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து 4 பிரிவாக பிரிந்து வீரநாராயணன் ஏரி, கும்பகோணம், தாரசுரம், பழை யறை தஞ்சை உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர்.

அதேபோல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னை கேளம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர்  வீரநாராயணன் ஏரி, கடம்பூர் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அதே போல் வீரநாராயணன் ஏரியை காண்ப தற்காக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வந்த வன்னம் உள்ளனர். சுற்றுலா வருபவர்கள் வீரநாராய ணன் ஏரி 17 கி.மீ. நீளம் உள்ளது இதில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் எந்த திட்டமும் இல்லை. இது ஒரு வழித்தடம்போல் உள்ளது. எனவே தற்போது பொன்னியின் செல்வன் மூலம் உத்வேகம் அடைந்தவர்கள் ஏரிக்கு வரத் தொடங்கியுள்ளனர். இந்த ஏரியை அரசு சுற்றுலாத் தளமாக மாற்ற வேண்டும். சிதம்பரம் நடராஜர் கோயில், பிச்சவாரம் படகுசவாரி, வீராணம் ஏரி உள்ளிட்டவைகளை ஒருங்கிணைத்து சுற்றுலா மையம் அமைக்க வேண்டும். வீராணம் ஏரியை வெட்டிய முதலாம் பராந்தக சோழன் ராஜா தித்தன் சிலையை இங்கு நிறுவ வேண்டும்.   வீரநாராயணன் ஏரி மூலம் தற்போது 47 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறும் நிலையில் தற்போது இந்த ஏரியை சுற்றுலா தளமாக மாற்றினால் இப்பகுதியில் உள்ள பொதுமக்களின் வாழ்வாதரம் வளர்ச்சி அடையும். மேலும் வரலாற்றை படமாக எடுக்கும் போது சம்பந்தபட்ட இடத்தை காட்டினால் இன்னும் திரைபடத்திற்கு வலு சேர்க்கும் என வீராணம் ஏரியின் ராதா மதகு பாசன சங்கத்தின் தலைவர் ரெங்கநாயகி கூறினார். -அ.காளிதாஸ்