tamilnadu

img

தொழில்

I    பல்வேறு நிர்வாக உத்தரவுகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் அனைத்து பொதுத்துறை நிறுவனங் களையும் தகர்த்து அழிக்கும் நோக்கில் மேற்கொள் ளப்பட்ட பேரழிவுக் கொள்கைகளை மாற்றியமைத்தல்; டிஐபிஏஎம் தொடங்கிய அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் தனியார்மயமாக்கல் முயற்சிகளையும் கைவிடுதல்.
I    வரிவிதிப்பின் பெரும் சுமையைத் திரும்பப் பெறுவதன் மூலம் பொதுத்துறைகளை, குறிப்பாக முக்கிய மற்றும் வணிக ரீதியாக நீண்டகால வாய்ப்பும் தேவையும் உள்ள தொழில்களில் வலுப்படுத்துதல்; நவீனமயமாக்கல் மற்றும் மேம்பாட்டிற்காக லாபத்தை திறமையான வகையில் மறுமுதலீடு செய்ய அனுமதித்தல்; சமமான வணிகக் களம் மற்றும் ஆதார வளங்களை அணுகுதல்; புதிய மூலதனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட தொழில் நுட்பத்துடன் நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவளித்தல்; ஒவ்வொரு இறக்குமதி கடமைகளிலும் தொழில்நுட்ப பரிமாற்றத்தை உறுதி செய்தல்; அதிக தன்னாட்சி மற்றும் செயல்திறனை ஊக்குவித்தல்; பொதுத்துறைக்குள் நிறுவனங்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு.
I    நீண்டகால தொழிற் கொள்கையை முழுமையான வகையில் அறிமுகப்படுத்துதல்; முதலீட்டு உத்திகளை மீட்டெடுத்தல்; அதிக வேலைவாய்ப்பு-முதலீட்டு விகிதத்தை உறுதி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த நிபந்தனைகள்; நிகர உற்பத்தித் திறனை அதிகரிக்க இரண்டின் ஒன்றுக்கொன்று தொடர்புடைய பங்கை ஊக்குவிப்பதன் மூலம் சேவை மற்றும் உற்பத்திக்கு இடையேயான இடைவெளியைக் குறைத்தல்.
I    இறுக்கமான ஏற்றுமதி-இறக்குமதி-முதலீட்டுக் கொள்கையின் மூலம் செயல்படுத்தப்படும் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பில் நமது உள்நாட்டு பிரிவுகளின் அதிகரித்த மதிப்பு கூட்டல் மற்றும் ஒதுக்கீட்டை உறுதி செய்தல்; பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் பல்வேறு கண்டங்களுக்கு இடையே செயல்படும் நிறுவனங்களின் மதிப்புச் சங்கிலி முழுவதிலும் கடுமையான தொழிலாளர் தர நிர்ணயங்கள் கடைப்பிடிக்கப் படுவதை உறுதி செய்தல்.
I    பங்கு முதலீடு மற்றும் மாற்று உரிமையின் மீது ஒரு உச்சவரம்பை விதிப்பதன் மூலம் நிதி அல்லாத நிறுவனங்களின் மீது நிதி நிறுவனங்களின் அபரிமிதமான கட்டுப் பாட்டைக் கட்டுப்படுத்துதல்; நிதி அல்லாத நிறுவனங்களின் நிதித் தேவைகளுக்கு ஆதரவளிக்க பொதுத்துறை வங்கிகளிடமிருந்து செயலூக்கமான கடன் கொள்கை
களை அறிமுகப்படுத்துதல்; ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு மற்றும் உள்நாட்டு திறன் மேம்பாடு ஆகியவற்றை ஊக்குவித்தல்; ஏகபோக உருவாக்கம் மற்றும் ஒருகுறிப்பிட்ட தொழில் உற்பத்தி மண்டலம் முழுவதையும் ஒரு நிறுவனமே ஆக்கிரமித்தல் என்பதன் மீது ஒரு விழிப்புமிக்க கட்டுப்பாட்டை விதித்தல்.
I    சணல் ஆலைகள், தோட்டங்கள், ஜவுளி, தோல், கைவினைப் பொருட்கள் மற்றும் கயிறு போன்ற - தொழிலாளர்கள் அதிகம் வேலை செய்யும் பாரம்பரிய தொழில்களுக்கு புத்துயிர் அளித்தல்; உள்நாட்டு கைத்தொழில்களைசர்வதேச சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்காக கடுமையான கொள்கைகளை வகுத்தல்; இந்திய உற்பத்திப் பொருட்களுக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சந்தைகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்.
I    போதுமான ஊக்கத்தொகைகள், உட்கட்டமைப்பு ஆதரவு மற்றும் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து போதுமான கடன் ஆகியவற்றுடன் தொழிலாளர் அதிகமாக பணியாற்றும் துறைகளில் குறு, சிறு மற்றும் நடுத்தர 
நிறுவனங்களை ஊக்குவித்தல்; குழும மேம்பாட்டுத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல்; குறு, சிறு, மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையில் தனியார் 
நுண்நிதி (மைக்ரோஃபைனான்ஸ்) நுழைவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதித்தல்; துன்பத்தில் ஆழ்ந்துள்ள குறைந்த வருவாய் குழுக் களின் கடன் களை தள்ளுபடி செய்தல்.
I    சுய உதவிக் குழுக்கள், கூட்டுறவு அமைப்புகள் போன்ற சமுதாய நிறுவனங்களை வலுப்படுத்துவதன் மூலம் 
தொழில் முனைவோர் செயல்பாடுகளை அதிகரிப்பதற்கான உத்தி; குறிப்பாக வீடு மற்றும் பாரம்பரிய தொழில்களில் ஈடுபட்டுள்ள இந்த பிரிவுகளுக்கு மானிய கடன்களை அதிகரித்தல்; கூட்டுறவு மற்றும் கூட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல்.
I    சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டைத் தடை செய்தல்; உரிமக் கொள்கை மூலம் ஈ-காமர்ஸ் மற்றும் உள்ளூர் கார்ப்பரேட் சில்லரை விற்பனையாளர்களை ஒழுங்குபடுத்துதல்; மற்றும் சிறு உற்பத்தி
யாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க அரசாங்கத்தின் சொந்த இ-காமர்ஸ் தளத்தை உருவாக்குதல்.
I    அமேசான், உபெர், ஜொமாட்டோ போன்ற உலகளாவிய நிறுவனங்களின் ஏகபோகத்தை உடைக்க பொதுத்துறை டிஜிட்டல் தள சேவைகளை அறிமுகப்படுத்துதல்; விரிவடைந்து வரும் டிஜிட்டல் பொரு
ளாதாரத்தில் உள்நாட்டு ஸ்டார்ட்-அப்கள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களுக்கு முறையான அரசாங்க ஆதரவு மற்றும் பாதுகாப்பை உறுதி செய்தல்.
I    தொழிலாளர்களின் உரிமைகளை சமரசம் செய்யாமல் அதிக தகவல் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியை இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் கொண்டு வருவதற்கான செய
லூக்கமான முன்முயற்சி; தகவல் தொழில்நுட்ப வன் பொருள் மற்றும் உதிரிபாக உற்பத்தியை அதிகரித்தல்; அனைத்து துறைகளையும் அவற்றின் சேவைகளையும் டிஜிட்டல் மயமாக்க அரசுக்கு சொந்தமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை அறிமுகப் படுத்துதல்; அல்காரிதம்கள், செயற்கை நுண்ணறிவு (AI/ML) மற்றும் பிற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களை பொதுமக்களுக்கு அவற்றின் நன்மைகளை ஜனநாயகப்படுத்தும் குறிக்கோளுடன் ஒழுங்குபடுத்துவதற்கான விதிகளை உருவாக்குதல்.
I    வரிச் சலுகைகளை நீக்கவும், கண்மூடித்தனமான நிலப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தவும் சிறப்புப் பொருளாதார மண்டலச் சட்டம் மற்றும் விதிகளில் படிப்படியாகத் திருத்தம் செய்தல்; அனைத்து சிறப்புப் பொருளாதார மண்டலங்களிலும் தொழிலாளர் நலச் சட்டங்கள் கண்டிப்பாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்தல்.
I    ஐபிசி மீதான விமர்சனரீதியான மறுபரிசீலனை; பி.எல்.ஐ திட்டங்கள் மூலம் பொது நிதியை மோசடி செய்வதை எதிர்த்தல்; பெரிய தனியார் நிறுவனங்களுக்கு நிபந்தனையற்ற கடன் தள்ளுபடிக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்.
I    எதிர்கால எரிசக்தி பாதுகாப்புக்கு அவசியமான அரிய நிலத்தடி பொருட்கள், லித்தியம் போன்ற முக்கியமான கனிமங்களை ஏகபோக நிறுவனங்கள், வணிக ரீதியாக சுரங்கப்படுத்த அனுமதிக்கும் வகையில் வடி
வமைக்கப்பட்ட எம்.எம்.டி.ஆர் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தை ரத்து செய்தல்; கச்சா எண்ணெய் ஆய்வு உட்பட கனிமத் துறையை மேலும் ஊக்குவிப்பது. இத் 
துறையில் தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கலை தடுத்து நிறுத்துவது.
I    ஆயுதத் தொழிற்சாலை வாரியத்தை (OFB) கலைப்பதைதிரும்பப் பெறுவது மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு உற் பத்தி பிரிவுகளை வலுப்படுத்துவது; பாதுகாப்பு உற் 
பத்தித் துறையில் தனியார் நுழைவை மாற்றியமைத்தல்; அந்நிய நேரடி முதலீட்டை நிறுத்துவது.
I    கோல் இந்தியா லிமிடெட் (CIL) திறன் அதிகரிப்பு மற்றும் விரிவான நிலக்கரி தளவாடத் திட்டத்திற்கான முழுமையான கொள்கையை உருவாக்குதல்; தனியாருக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் அனைத்தையும் கோல் இந்தியா நிறுவனத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும்; இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை நம்பியிருப்பதைக் குறைத்தல் மற்றும் தனியார் நிறுவனங்கள் மோசடியாக நிலக்கரி இறக்குமதி செய்வது
குறித்து நீதி விசாரணை நடத்துதல்.