tamilnadu

சீனாவைச் சீண்டுகிறது அமெரிக்கா தைவானில் அமெரிக்கக் குழு

பெய்ஜிங், மார்ச்.5- தைவானுக்கு அமெரிக்கக்குழு வந்தி ருக்கும் நோக்கம் தோல்வியைத் தழுவும் என்று சீனா கூறியுள்ளது. மைக் முல்லன் என்ற அமெரிக்காவின் முன்னாள் அரசு அதிகாரியின் தலைமை யில் ஒரு அமெரிக்கக்குழு தைவான் வந்துள் ளது. சீனாவின் ஒரு பகுதியான தைவானு க்கு ராணுவமற்றும் பாதுகாப்புத்துறை மூத்த முன்னாள் அதிகாரிகள் அடங்கிய ஒரு குழுவை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்அனுப்பி வைத்துள்ளார். தைவானுக்கு அமெரிக்கா ஆதரிவளிப்பதை உறுதிப்படுத்தும் வகையில் இந்தக் குழு வந்துள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அமெரிக்கக் குழுவின் நோக்கம் தோல்வியையே தழுவும் என்று சீனா கணித் துள்ளது. ஒரு தனியார் ஜெட் விமானம் மூலம் இவர்கள் வந்திறங்கினர். விமான நிலையத்தி லேயே தைவானின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வு, அமெரிக்கக்குழுவை வரவேற்றார். தைவான் ஜனாதிபதி சாய் இங்-வென்னை இந்தக்குழுவினர் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க இருக்கிறார்கள். அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புத்துறை செயலாளரான மைக் பாம்பி யோவும் தைவான் வருகை தரவிருக்கிறார். இக்குழுவின் வருகை பற்றிக் கருத்து தெரிவித்த சீன வெளியுறவுத்துறை அமைச் சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின், “தைவானுக்கு யாரை அனுப்பி வைத்தாலும் அது தோல்வியில்தான் முடியும். நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமை யைப் பாதுகாப்பதில் சீன மக்களுக்கு இருக்கும் உறுதியை யாராலும் குலைக்க முடியாது” என்று குறிப்பிட்டார். ஒரு சீனா என்ற அடிப்படையில் தைவான் மீதான இறையாண்மை சீனாவுக்கு உள்ளது என்று கிட்டத்தட்ட உலகின்அனைத்து நாடு களும் அங்கீகரித்துள்ளன. இந்த நிலையி லும், உக்ரைன் நிலைமை மோசமாகி வரும் சூழலிலும் அமெரிக்கா இத்தகைய நடவடிக்கை யை மேற்கொண்டுள்ளது. இத்தனைக்கும் அமெரிக்காவும் ஒரு சீனா என்பதை அங்கீ கரித்திருக்கிறது. தனது சொந்த கொள்கை யையே சீனா மீறுகிறது என்று சீன வெளியுறவுத் துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகிறார்கள்.