தூத்துக்குடி, டிச.3- தூத்துக்குடி மாவட்டம் முழு வதும் குடிநீர், சாலை, வடிகால், போக்குவரத்து, சுகாதாரம், மருத்து வம் உள்ளிட்ட அடிப்படைப் பிரச்ச னைகளை தீர்க்க வலியுறுத்தி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாவட்டத்தில் 150 கி.மீ., நடைபய ணத்தை சனிக்கிழமை தொடங்கி யுள்ளது. மாவட்டத்தில் கோவில்பட்டி, திருச்செந்தூர், திருவைகுண்டம் ஆகிய இடங்களிலிருந்து தொடங்கி யுள்ள 150 கி.மீ., நடைபயணம் தூத் துக்குடியில் நிறைவடைகிறது. கோவில்பட்டி தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதான நகரான கோவில்பட்டியில் பழுதடைந்துள்ள சாலைகள், ஆற் றின் வரத்துக் கால்வாய்களை சரி செய்ய வேண்டும். கோவில் பட்டி நகர இளைஞர்களின் வேலை வாய்ப்பு கனவை நனவாக்க புதிய தொழிற்சாலை தொடங்க வேண்டும். கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்க அனுமதி இல் லாமல் முறைகேடாக இறக்குமதியா கும் லைட்டர்களை தடை செய்ய வேண்டும்,
திருச்செந்தூர்
தூத்துக்குடி-திருச்செந்தூர் சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும். திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும்.
மீனவர்களின் வாழ்வாதாரம்
பாரம்பரிய மீனவர்களின் வாழ் வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் கடற்கரை மண்டல மேலாண்மை திட்டம் 2019-ஐ கைவிட வேண்டும். உடன்குடி ஒன்றியத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறுவதைத் தடுக்க சடை நெறி கால்வாயை சீரமைத்து குளங்களின் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். சாத்தான்குளம் ஒன்றி யத்தில் நிலத்தடி நீர் உப்பாக மாறு வதை தடுக்க கண்ணடியான் கால் வாய் திட்டத்தை விரைவாக நிறை வேற்ற வேண்டும்.
வாழை விவசாயம்
ஆழ்வார்திருநகரி, திருவைகுண் டம், கருங்குளம் ஒன்றியங்களில் வாழை விவசாயத்தைப் பாதுகாக்க வும் வாழையின் மூலப் பொருட்களி லிருந்து மதிப்பு கூட்டும் பொருட் களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
மக்களுக்கு தேவை நிம்மதி
மழைக்காலங்களில் தூத்துக்குடி மாநகரில் மழைநீர்-வெள்ளநீர் தேங் காமல் மக்கள் நிம்மதியாக வாழ சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தூத்துக்குடியில் இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுமான பணிகளை உடனடியாகத் தொடங்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து இயங்கி வந்த ரயில்கள் கொரோனா பெருந்தொற்றை காரணம் காட்டி நிறுத்தப்பட்டுள்ளது, இந்த ரயில் களை உடனடியாக இயக்க வேண்டும். துறைமுகம், அனல் மின் நிலை யம், எம்டிபிஎல் உள்ளிட்ட அரசு நிறு வனங்களில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு தனியார் நிறுவனங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணி புரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும், ஒட்டப்பிடாரம் ஒன்றியத்தில் மழைக்காலங்களில் வீணாகும் நீரை மலைப்பட்டி அருகே தடுப்பணை கட்டி ஒட்டன் கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். பல ஆண்டு களாக திறக்கப்படாமல் உள்ள பேருந்து நிலையத்தை திறக்க வேண்டும்,
தேவை கழுகுமலையில் கல்லூரி
எட்டயபுரத்தில் தொழிற்பேட்டை அமைக்க வேண்டும், விவசாயி களின் விலை பொருட்கள் சேமித்து வைக்க குளிர்சாதன கிடங்கு அமைக்க வேண்டும், தமிழக அரசு அறிவித்த படி கழுகு மலையில் அரசு கலை கல்லூரி அமைக்க வேண்டும்.
திருவைகுண்டம்
மழைக்காலங்களில் தாமிரபரணி ஆற்றில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க திரு வைகுண்டம் அணையில் கீழ்ப்பகுதி யில் தடுப்பணை கட்ட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தினை நகர்ப் புற பகுதிகளுக்கு விரிவுபடுத்த வேண்டும், விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு இழப்புத் தொகையை பாக்கி இல்லாமல் உடனுக்குடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடைபயணத்தை தொடங்கியுள்ளது. நடைபயணத்தில் மாவட்டச் செய லாளர் கே.பி.ஆறுமுகம், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.எஸ். அர்ச்சுணன், கோவில்பட்டி சீனி வாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். திருவைகுண்டத்தில் நடைபய ணத்தை மாநிலக்குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்கரன், திருச்செந்தூரில் மாநிலக் குழு உறுப்பினர் கே.பி.பெரு மாள், கோவில்பட்டியில் மாநிலங்க குழு உறுப்பினர் விருதுநகர் அர்ஜூ ணன் ஆகியோர் தொடங்கி வைத்த னர்.