tamilnadu

img

குமரி மாவட்டத்தில் எழுச்சிமிகு மறியல்

நாகர்கோவில், மார்ச் 28- ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளை வைவிட வலியுறுத்தி தொழிலா ளிகள் நடத்தி வரும் இரண்டுநாள் (மார்ச் 28,29) பொது வேலை நிறுத்தம் குமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. திங்களன்று தொழிற் சங்கங்கள் பத்து மையங்களில் நடத்திய மறியலில் சுமார் 2 ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்றனர். பெரும்பாலான பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட ஒன்றிய அரசு நிறுவனங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின. நாகர்கோவில் மீனாட்சிபுரம் இந்தியன் வங்கி கிளை முன்பு நடந்த மறியலுக்கு சிஐடியு மாவட்ட  செயலாளர் கே.தங்கமோகனன், எல்பிஎப் மாநில துணை செயலாளர் வ. இளங்கோ, ஐஎன்டியுசி மாவட்ட செயல்தலைவர் ராதாகிருஷ்ணன், எச்எம்எஸ் மாநில அமைப்பு செயலாளர் எஸ்.முத்துகருப்பன், எம்எல்எப் மாவடட செயலாளர் சி.ஜெரால்டு தலைமை வகித்தனர். தமிழ்நாடு மீன் சம்மேளன பொது செயலாளர் எஸ்.அந்தோணி, எல்பிஎப் சிவன் பிள்ளை, ஐஎன்டியுசி மகாலிங்கம், எச்எம்எஸ் ஈஸ்வரபிரசாத், எம்எல்எப் சந்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் (திமுக), காங்கிரஸ் நகர தலைவர் நவீன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏ.வி.பெல்லார்மின், எம்.அகமது உசேன், மதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.வெற்றிவேல் உள்ளிட்ட ஏராள மானோர் பங்கேற்றனர்.

கருங்கல்

கருங்கல் தபால் நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்க மறியல் போராட்டம் நடை பெற்றது. காங்கிரஸ் கட்சியின் கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமை தாங்கினார். போராட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்ட துணைத்தலைவர் பொன்.சோபன ராஜ், திமுக மாவட்ட பொருளாளர் மரிய சிசுகுமார் பேசினர். சிபிஎம் வட்டார செயலாளர் சாந்தகுமார், திமுக வட்டார செயலாளர் ராஜன் , காங்கிரஸ் கட்சி வட்டார தலைவர் டென்னிஸ் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் எபலைசியஸ்ஜோயல், அருள்ராஜ் (திமுக) குமரேசன், கிறிஸ்டல் ரமணிபாய் (காங் கிரஸ்) உட்பட திரளானோர் மறியலில் பங்கெடுத்து கைதாகினர்.

ஆரல்வாய்மொழி

ஆரல்வாய்மொழி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முன்பு நடந்த மறியலுக்கு எல்பிஎப் நிர்வாகி சொ.மகாராஜபிள்ளை, சிஐடியு எஸ்.சக்திவேல், ஏஐடியுசி எஸ்.அனில்குமார், எச்எம்எஸ் எம்.லெட்சுமணன், எம்எல்எப் எஸ்.மகாராஜ பிள்ளை, ஐஎன்டியுசி எஸ்.முருகானந்தம் தலைமை வகித்தனர். சிபிஐ மாவட்ட செயலாளர் எஸ்.இசக்கிமுத்து, சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ்.மிக்கேல், காங்கிரஸ் வட்டார செயலாளர் எஸ்.சகாயராஜ், மதிமுக ஒன்றிய செயலாளர் வி.நீலகண்டன் உள்ளிட்டோர் மறியலில் ஈடுபட்டு கைதாகினர்.

குழித்துறை

குழித்துறை ஐஓபி முன்பு மறியல் நடை பெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சிங்காரன், எல்பிஎப் மாவட்ட தலைவர் ஞானதாஸ், எப்.ஜாண், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைத்தம்பி, சிஐடியு நிர்வாகி சுரேஷ் சி. மார்த்தாண்டம், திமுக நிர்வாகி பப்புசன் மற்றும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இராஜாக்கமங்கலம்

இராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடந்த மறியலுக்கு சிஐடியு கட்டுமான தொழிலாளர் சங்க மாநில தலைவர் கே.பி.பெருமாள், எல்பிஎப் நிர்வாகி பி.முருகேசன், ஐஎன்டியுசி வி.முருகே சன், எம்எல்எப் ஏ.ரவிகுமார், ஐஎன்டியுசி நரேந்திரகுமார், சிபிஎம் வட்டார செயலாளர் எஸ்.டி.ராஜ்குமார், சிஐடியு முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்று கைதாகினர்.

தக்கலை

தக்கலையில் நடந்த மறியலுக்கு சிஐடியு பொது தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜான் சவுந்தர ராஜ் தலைமை வகித்தார். சிஐடியு தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் சந்திரகலா,  அங்கன்வாடி பணியா ளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சரஸ்வதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சைமன்சைலஸ், ஏஐடியுசி நிர்வாகி ராஜி, தொமுச மணி, ஐஎன்டியுசி மாவட்ட துணை தலைவர் பி.டி.எஸ்.மணி உள்ளிட்டோர் பேசினர். எராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கைதாகினர்.  பொது வேலை நிறுத்தத் தையொட்டி குமரி மாவட்டத்தில் திங்களன்று குறைவான அளவு பஸ்கள் இயக்கப்பட்டது. மாவட்டத்தில் உள்ள 12 பணிமனைகளிலும் ஓட்டுநர், நடத்துநர்கள் குறைவான அளவே வந்திருந்ததால் குறைந்த அளவு பேருந்துகளே இயக்கப்பட்டன.  வடசேரியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு பஸ்கள் இயக்கப்பட வில்லை. கேரளத்தில் முழுமையான வேலை நிறுத்தம் நடப்பதால் மாவட்ட எல்லையான களியக்காவிளை வரை சில தமிழக பேருந்துகள் இயக்கப்பட்டன.  குறை வான அளவே பேருந்துகள் இயக்கப்பட்டாலும் அண்ணா பேருந்து நிலையம் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்பட்டது.  கிராமப்புறங்களுக்கு காலையில் பேருந்துகள் செல்லாததால் பள்ளிக்கு வரும் மாணவ-மாணவிகள் திரும்பி செல்லும் நிலை  ஏற்பட்டது.  மாவட்டத்தில் உள்ள அனைத்து பேருந்து நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.   சாலைகளில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது. வேலை நிறுத்தம் காரணமாக பொது மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியே வராமல் முடங்கி னார்கள். ரப்பர், முந்திரி போன்ற மாவட்டத்தின் தொழில்துறைகளில் வேலை நிறுத்தம் முழு அளவில் நடைபெற்றது.