கண்ணூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது அகில இந்திய மாநாட்டின் ஒரு பகுதியாக ஏப்ரல் 9 அன்று மாலை நடைபெற்ற மாநில உரிமைகள் பாதுகாப்பு கருத்தரங்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர். தேசிய அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெற்ற இக்கருத்தரங்கில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். இரு மாநில முதல்வர்களுடன் கட்சியின் தமிழக தலைவர்கள் ஜி.ராமகிருஷ்ணன், கே.பாலகிருஷ்ணன், அ.சவுந்தரராசன், சு.வெங்கடேசன் எம்.பி., மற்றும் கேரள அமைச்சர் எம்.வி.கோவிந்தன் மாஸ்டர், கண்ணூர் மாவட்டச் செயலாளர் எம்.வி.ஜெயராஜன் ஆகியோர். (வலது) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சியின் கேரள மாநில செயலாளர் கோடியேறி பாலகிருஷ்ணன் நினைவு பரிசினை வழங்கினார்.