உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காத உபி அரசு : ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவு
லக்னோ உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை ஜாமீனில் விடு தலை செய்யாத உத்தரப் பிர தேச அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்ததுடன் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து அதிரடி உத்த ரவு பிறப்பித்துள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் காசியா பாத் சிறையில் உள்ள குற்றவாளி ஒருவருக்கு கடந்த மாதம் விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால், வழக்கின் துணை பிரிவை காரணம் காட்டி கைதியை சிறை அதி காரிகள் விடுவிக்கவில்லை. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறை யிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி விஸ்வநாதன் அமர்வு, உத்தரப் பிரதேச சிறைத்துறை டிஜிபி சிறை கண்காணிப்பாளர் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தது. சிறைத் துறை டிஜிபி காணொலி மூலமும் சிறை கண்காணிப்பாளர் நேரிலும் ஆஜ ராகினர். அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி கைதியை விடுவிக்க மறுத்ததற்கு நீதி பதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இது போன்று எத்தனை பேர் இன்னும் சிறையில் உள்ளனர் என கேள்வி எழுப்பினர். பின்னர், உத்தரப்பிரதேச சிறைத்துறை கண்கா ணிப்பாளருக்கு 5 லட்ச ரூபாய் அப ராதம் விதித்து அதனை 24 மணி நேரத்துக்குள் பாதிக்கப்பட்ட நபருக்கு வழங்க உத்தரவிட்டனர்.