tamilnadu

குடவாசலில் முதுபெரும் தலைவர் தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு

குடவாசலில் முதுபெரும் தலைவர்  தோழர் கோ.வீரய்யன் சிலை திறப்பு

திருவாரூர், மே 17-   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் கோ. வீரய்யன் சிலை யை, கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திறந்து வைத்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், மக்கள்  போற்றும் மகத்தான தலைவருமான தோழர் கோ. வீரய்யன் நினைவைப் போற்றும்  வகையில் குடவாசல் கட்சி அலுவலகம் தியாகி சி.தங்கையன் நினைவகத்தில் சிலை  நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் அகில இந்திய 24 ஆவது மாநாட்டின் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் சனிக்கிழமை மாலை குடவாசலில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி. முருகையன்  தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி யில், செயற்குழு உறுப்பினர் ஜி. சுந்தர மூர்த்தி மற்றும் நகரக் குழு செயலாளர் டி.ஜி. சேகர், குடவாசல் ஒன்றிய செய லாளர்கள் டி. லெனின் (தெற்கு), கே. அன்பழ கன் (வடக்கு), மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஆர். லட்சுமி, பா.லெ. சுகதேவ் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். தோழர் கோ. வீரய்யன் சிலையை கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம்  திறந்து வைத்தார். கட்சியின் சட்ட மன்றக்குழு தலைவர் வி.பி. நாகைமாலி  செங்கொடியை ஏற்றினார். மூத்த தோழ ரும், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவரு மான டி. அய்யாறு, கல்வெட்டை திறந்து வைத்தார்.  சிலை திறப்பு நிகழ்ச்சியில், மாநி லக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், நாகை மாவட்டச் செயலாளர் வி. மாரி முத்து, தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் பி. சீனிவாசன், மூத்த  தலைவர் என். சீனிவாசன் மற்றும் பல்வேறு  அரசியல் கட்சிகளின் தலைவர்கள், வர்க்க - வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், கட்சி யின் மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  முன்னதாக, குடவாசல் வி.பி. சிந்தன் பேருந்து நிலையம் அருகில் மாநில செய லாளர் பெ. சண்முகத்திற்கு, செந்தொண் டர் அணிவகுப்புடன் வரவேற்பு அளிக் கப்பட்டது.