tamilnadu

img

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு திட்டங்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி

மதுரை,பிப்.5- மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் இரண்டு திட்டங்களுக்கு அனுமதி யளித்து ஒன்றிய சாலைப் போக்குவரத்து-நெடுஞ்சாலைத்துறை  அமைச்சர் நிதின்  கட்கரி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசனுக்கு கடிதம் அனுப்பி யுள்ளார். இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி.,  வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வரு மாறு: மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் ஒத்தக்கடையில் இருந்து திரு மோகூர் செல்லும் பாதையில் அணுகுச்  சாலை இல்லை. இதனால் திருமோகூர் செல்லும் பக்தர்களும் அந்த வழியில்  இருக்கிற இராஜகம்பீரம், தாமரைப்பட்டி, இடையபட்டி உள்ளிட்ட பல்வேறு ஊர்  களைச் சேர்ந்த மக்களும் தேசிய நெடுஞ் சாலையை அடைய பல கிலோமீட்டர் தூரம் சுற்ற வேண்டியுள்ளது. எனவே இச்சந்திப் பில் அணுகுச்சாலை வேண்டும். அதே போல கொட்டாம்பட்டி ஒன்றியம் வலைச்சேரிப் பட்டி சந்திப்பில் மேம்பாலம்  இல்லாததால் மிக அதிகமான விபத்துகள் நடக்கும் இடமாக அது இருக்கிறது.

ஒவ் வொரு ஆண்டும் எண்ணற்ற உயிரிழப்பு  நிகழ்கிறது. இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கை இங்கு மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பது. இவ்விரண்டு கோரிக் கைகளை ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி யிடம் நேரிலும், கடிதத்தின் மூலமும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தேன். இந்நிலையில்  சாலைப் போக்குவரத்து  -நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி  ஜனவரி 30 ஆம் தேதி எனக்கு நல்ல தொரு பதிலை தந்திருக்கிறார். “ உங்களின் இரண்டு கோரிக்கைகள் குறித்தும் பரிசீலித்தேன்; சாத்தியக் கூறு  ஆய்வு” (Feasibility Survey) முன்னெ டுக்கப்பட்டுள்ளது; அந்த ஆய்வின் அடிப்ப டையில், திருத்தங்கள் தேவைப்படின் அதையும் செய்து நிறைவேற்றப்படும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கி றேன்” எனக் கூறியுள்ளார்.  அமைச்சரின் இக்கடிதம் மதுரை தொகுதி மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தருவதாகும். எனது கோரிக்கையை ஏற் றுக்கொண்ட அமைச்சருக்கு எனது நன்றி யை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.