மயிலாடு துறை மாவட்டம் செம்பனார்கோவிலில் வடக்கு ஒன்றிய திமுக ஒன்றியச் செயலாளர் பி.எம்.அன்பழகன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மண்டல தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர் பி.எம்.ஸ்ரீதர், மாவட்ட துணைச் செயலாளர் ஞானவேலன், சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் விஜயபாலன் ஆகியோர் கலைஞரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.