மதுரை, நவ.4- இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு முன்பதிவில், இவ்வளவு கால மும் தமிழிலும் வழங்கப்பட்ட சேவை யை, ஒன்றிய பாஜக அரசு திடீரென நீக்கி, இந்தியைத் திணித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித் துள்ளார். வழக்கமாக இண்டேன் தானி யங்கி சமையல் எரிவாயு பதிவு சேவை யில் தமிழ், ஆங்கிலம் என அந்தந்த மாநில மொழிகள் இடம்பெற்றிருக் கும். இதனால் இந்தியா முழுவதிலும் அந்தந்த மாநில மக்கள் அவர்களுக்கு ஏற்ற மொழியை தேர்வு செய்து முன் பதிவு செய்து கொள்வார்கள். ஆங்கிலம் அல்லது இந்தி தெரி யாத மக்களுக்கு சுலபமாக இருந்தது. ஆனால் தற்போது இண்டேன் தானி யங்கி சமையல் எரிவாயு பதிவுச் சேவையில், மோடி அரசு சத்தமே இல் லாமல் தமிழ்மொழியை நீக்கி, இந்தி யைத் திணித்துள்ளது. தமிழ் மொழி நீக்கப்பட்டதால் பொதுமக்கள் முன் பதிவு செய்வதில் சிரமத்திற்கு உள் ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்தப் பிரச்சனை தொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்ப ரேசன் தலைவருக்கு சு. வெங்கடேசன் எம்.பி. கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “இண்டேன் தானியங்கி சமையல் எரிவாயு பதிவு சேவையில் இவ்வளவு காலம் தமிழ், ஆங்கி லத்திற்கான வாய்ப்புகள் தரப்பட்டி ருந்தன. தற்போது அந்த வாய்ப்புகள் நீக்கப்பட்டு இந்திச் சேவை மட்டுமே கிடைக்கிறது. அலைபேசி வழியாக பதிவு செய்யப்போகிற மக்கள் என்ன வென்றே புரியாமல் திகைத்து நிற்கி றார்கள். ‘சமையல் எரிவாயு வேண்டு மென்றால் இந்தி கற்றுக் கொண்டு வா’ என்று மக்களை துரத்துவது போல உள்ளது. இந்தியன் ஆயில் கார்ப்ப ரேஷன் அதிகாரிகளுக்கு அலுவல் மொழி விதிகள் தெரியுமா? அதில் இந்திய மாநிலங்கள் மூன்று வகை களாக பிரிக்கப்பட்டு இருப்பது தெரி யுமா? குறிப்பாக தமிழ்நாட்டிற்கு அந்த விதிகளில் இருந்து விலக்கு அளிக் கப்பட்டு இருப்பது தெரியுமா? இல்லை தெரிந்தே மீறுகிறார்களா? விதிகளை மீறுவதற்கு தைரியம் அளித்தது யார்? அமைச்சக மட்டத்தில் இருந்து நிர்ப்பந்தமா?” என்று கேள்வி எழுப்பி யிருக்கும் சு.வெங்கடேசன் எம்.பி. “மீண்டும் இண்டேன் சமையல் எரி வாயு தானியங்கி பதிவுக்கு தமிழ்ச் சேவையை தர வேண்டும்’’ என குறிப் பிட்டுள்ளார்.